விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு கேட்டு
நாமக்கல், ஜூலை 4- விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு கேட்டு, தொடர் இயக்கங்களை நடத்த இந்திய தொழிற்சங்க மையம் முடிவு செய்துள்ளது.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே உள்ள காவேரி ஆர்.எஸ். இந்திய தொழிற்சங்க மைய அலுவலகத் தில், சிஐடியு பள்ளிபாளையம் விசைத்தறி தொழிலாளர் சங்க ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சங்கத் தின் ஒன்றியச் செயலாளர் முத்துக்குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எம்.அசோகன் சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில், பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான தொழிலாளர்கள் விசைத்தறி தொழிலை நம்பி பணியாற்றி வருகின்றனர். விசைத்தறி தொழிலாளர்களுக்கு 22.5.2023 ஆம் தேதியில் போடப்பட்ட கூலி உயர்வு ஒப்பந்தப் படி, கடந்த ஜூன் 1 ஆம் தேதி முதல் 3 சதவிகித கூலி உயர்வு வழங்க வேண்டும். ஆனால், தற்போது வரை விசைத்தறி நிர்வாகங்கள் கூலி உயர்வு தராமல் தாமதப்படுத்தி வரு கின்றன. இதனால் விசைத்தறி நிர்வாகிகளை கண்டித்து, தற் போது வழங்கும் சம்பளத்தைவிட 3 சதவிகித சம்பளத்தை உடனே உயர்த்தி வழங்க வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக அரசும், சம்பந்தப்பட்ட அரசுத்துறை அதிகாரிகளும் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் சார் பில் வெள்ளியன்று (இன்று) ஆயக்காட்டூர் பகுதியில் ஆர்ப் பாட்டம் நடைபெற உள்ளது. அதேபோன்று, பள்ளிபாளை யம், ஆவரங்காடு சனி சந்தை திடல், ஆவத்திபாளையம், காவேரி ஆர்.எஸ், மற்றும் பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகு தியில் பல்வேறு இடங்களில் கூலி உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் முழக்கப் போராட்டங்களை நடத்து
வதென முடிவு செய்யப்பட்டது.
நடிகை அதுல்யா வீட்டில் திருடிய 2 பேர் கைது
கோவை, ஜூலை 4-
கோவை வடவள்ளியில் நடிகை அதுல்யா வீட்டில் திருடிய இரண்டு பேரை புதனன்று போலீசார் கைது செய்தனர்.
நாடோடிகள் 2, காதல் கண்கட்டுதே உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து இருப்பவர் நடிகை அதுல்யா ரவி. இவர் கோவையில் உள்ள வடவள்ளி, மருதம் சாலையில் உள்ள வீட் டில் தனது தாயார் விஜயலட்சுமி உடன் வசித்து வருகிறார். இந்நிலையில், இவரது வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஸ்போர்ட் மற்றும் ரூபாய் 2,000 பணம் திருட்டு போனது. இதுகுறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து திருட்டில் ஈடுபட்டது யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், வீட் டில் வேலை பார்க்கும் தொண்டாமுத்தூர் அடுத்த குளத்து பாளையத்தைச் சேர்ந்த செல்வி என்பவர் மீது போலீசா ருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் நடத்திய விசாரணை யில்,. செல்வி தனது தோழியுடன் சேர்ந்து பணம் மற்றும் பாஸ் போர்ட்டை திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் திருட்டில் ஈடுபட்ட செல்வி மற்றும் அவருடைய தோழியான சுபாஷினி ஆகியோரை கைது செய்தனர்.
பயணச்சீட்டு இல்லாமல் ரயில் பயணம்: சேலம் கோட்டத்தில் ரூ.5.88 கோடி அபராதம்
சேலம், ஜூலை 4- சேலம் ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட ரயில் நிலையங்க ளில் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை முதல் காலாண் டில் பயணச்சீட்டு பெறாமல் ரயிலில் பயணித்தவர்களிடம் இருந்து ரூ.5.88 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், சேலம் ரயில்வே கோட்டத் திற்குட்பட்ட சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட ரயில் நிலை யங்களில் பயணச்சீட்டு இல்லாமல் ரயிலில் பயணிப்பவர்கள், முறையற்ற வகையில் பயணிப்பவர்கள், பதிவு செய்யாமல் சரக்குகளை ரயிலில் கொண்டு செல்பவர்களைக் கண்டறிந்து, ரயில்வே அதிகாரிகள் அபராதம் விதித்து வருகி ன்றனர். அதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை முதல் காலாண்டில் சேலம் கோட்டத்திற்குட்பட்ட ரயில் நிலையங்களில், பயணச்சீட்டு இல்லாமல் பயணித்த 42 ஆயிரத்து 823 பேரிடம் இருந்து ரூ.3 கோடியே 62 லட்சத்து 25 ஆயிரத்து 979 அபராதம் வசூலிக்கப்பட்டது. ரயில்களில் முறையற்ற பயணம் மேற்கொண்டதாக 36 ஆயிரத்து 619 பேரிடம் இருந்து ரூ.2 கோடியே 25 லட்சத்து 46 ஆயிரத்து 33 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. ரயிலில், பதிவு செய்யா மல் சரக்குகளைக் கொண்டு சென்றதாக 83 பேரிடம் இருந்து ரூ.45 ஆயிரத்து 801 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக, சேலம் கோட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை முதல் காலாண்டில் ரூ.5 கோடியே 88 லட்சத்து 17 ஆயிரத்து 813 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது எனத் தெரி விக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு
சேலம், ஜூலை 4- கோவையில் இருந்து ராஜஸ்தான் மாநிலத்திற்கு இயக் கப்பட்டு வரும் வாராந்திர ரயில் சேவை நீட்டிக்கப்பட் டுள்ளது.
கோவையிலிருந்து ராஜஸ்தான் மாநிலம், பகத் கி கோட் டிக்கு வாராந்திர சிறப்பு ரயில் சேவை ஜூன் மாதம் வரையே நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த ரயிலின் சேவை யானது ஜூலை 28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில், கோவையில் இருந்து ஜூலை 4 முதல் 25 ஆம் தேதி வரை வியாழக்கிழமைகளில் அதிகாலை 2.30 மணிக்குப் புறப்படும் கோவை - பகத் கி கோட்டி வாராந் திர சிறப்பு ரயில் (எண்: 06181) சனிக்கிழமைகளில் காலை 11.30 மணிக்கு பகத் கி கோட்டி நிலையத்தைச் சென்றடை யும். அதேபோன்று, பகத் கி கோட்டி ரயில் நிலையத்தில் இருந்து ஜூலை 7 முதல் 28 ஆம் தேதி வரை ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 7.30 மணிக்குப் புறப்படும் பகத் கி கோட்டி - கோவை வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 06182) புதன்கிழமைக ளில் காலை 9.30 மணிக்கு கோவை ரயில் நிலையத்தை சென்ற டையும். இந்த ரயிலானது, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, கடப்பா, காச்சி குடா, நிஜாமாபாத், வாசிம், அகோலா உள்ளிட்ட நிலை யங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றால் விழுந்த வாழை மரங்களுக்கு
உதகை, ஜூலை 4- கனமழை மற்றும் காற்றால் 7 ஆயிரத் திற்கும் அதிகமான நேந்திரன் வாழை மரங்கள் சாய்ந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கூட லூர் விவசாயிகள் கோரிக்கை விடுத் துள்ளனர்.
நீலகிரி மாவட்டம், உதகை, கூட லூர், பந்தலூர், நெலா கோட்டை தேவால முதுமலை பகுதிகளில் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக, பெய்து வரும் மழையுடன், அவ்வப்போது பலத்த காற் றும் வீசி வருகிறது. இதன் காரணமாக மண்வயல், பாடந்துறை, புளியம் பாறை, மங்குழி, ஏழுமுரம், தேவர் சோலை உள்ளிட்ட பகுதிகளில் நேந்தி ரன் வாழை மரங்கள் சாய்ந்து விவசாயிக ளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ள தால், கடனை திருப்பி செலுத்த முடியா மல் விவசாயிகள் கவலை அடைந்துள் ளனர். எனவே, அறுவடை செய்ய இருந்த நிலையில், மழையுடன் வீசிய காற்றால், ஏராளமான வாழை மரங்கள் சாய்ந்து நஷ்டத்தை ஏற்படுத்தி உள் ளது. நஷ்டத்தை ஈடு செய்ய அரசு, உடன டியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத் துள்ளனர்.
மின்சாரம் பாய்ந்து குழந்தை பலி
மின்சாரம் பாய்ந்து குழந்தை பலி சேலம், ஜூலை 4- அம்மாப்பேட்டை அருகே மின்சாரம் பாய்ந்ததில் 10 மாத பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையி னர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம், அம்மாப்பேட்டை அருகே உள்ள வைத்தி உடையார்காடு பகுதியைச் சேர்ந்த நேதாஜிகுமார் - நந் தினி தம்பதியின் 10 மாத பெண் குழந்தை இனன்யா.
இந்நிலையில், குழந்தை இனன்யா பாட்டி வீட்டில் விளை யாடிக் கொண்டிருந்த போது, கலைச்செல்வி மின்மோட்டாரு டன் கூடிய தையல் எந்திரத்தில் துணி தைத்துக் கொண்டிருந் தார். அப்போது, எதிர்பாராத விதமாக குழந்தை இனன்யா தையல் எந்திரத்துக்கு செல்லும் மின் கம்பியில் கைவைத்த தில், மின்சாரம் பாய்ந்து குழந்தை தூக்கி வீசப்பட்டது. இதை யடுத்து கலைச்செல்வி, உறவினர்களின் உதவியுடன் குழந் தையை மீட்டு அம்மாப்பேட்டையில் உள்ள தனியார் மருத்து வமனைக்கு கொண்டு சென்றார்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி குழந்தை செவ்வாயன்று இரவு உயிரிழந்தது. இச்சம்பவம் குறித்து அம்மாப்பேட்டை காவல் துறையினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
அணைகள் நிலவரம்
சோலையார் அணை
நீர்மட்டம்:113.90/160அடி
நீர்வரத்து:1062.92 கனஅடி
நீர்திறப்பு: 1259.80 கனஅடி
மழை அளவு:19 மிமீ
பரம்பிக்குளம் அணை
நீர்மட்டம்:20.70/72 அடி
நீர்வரத்து: 1351 கனஅடி
நீர் திறப்பு: 67 கனஅடி
ஆழியார் அணை
நீர்மட்டம்:86.30/120அடி
நீர்வரத்து: 262 கனஅடி
நீர் திறப்பு: 167 கனஅடி
அமராவதி அணை
நீர்மட்டம்: 62.24/90அடி
நீர்வரத்து336கனஅடி
நீர் திறப்பு :314 கனஅடி
பகலில் உலா வந்த கரடி
உதகை, ஜூலை 4- கோத்தகிரி சாலையில் வட்டப்பாறை அருகே பகலில் உலா வந்த கரடியால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ள னர். நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் பகல் நேரங்களில் கரடிகள் உலா வருவது தொடர் நிகழ்வாக உள்ளது.
இந்நிலை யில் குன்னூர் கோத்தகிரி சாலையில் வட்டப்பாறை அருகே புதனன்று கரடி பகலில் உலா வந்தது. அப்போது அவ்வழி யாக காரில் வந்தவர்கள் அந்த கரடியை வீடியோ எடுத்தனர். காரை பார்த்து ஓட்டம் பிடித்த கரடி அருகில் இருந்து வனப்பகு திக்குள் சென்றது.