நாமக்கல், ஜூலை 20- திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையம் அரசு மேல் நிலைப்பள்ளி கடந்த 40 ஆண்டு காலமாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் முன்பு மூன்று ஆண் டுக்கு முன்னதாகவே வேகத்தடை ஒன்று இருந்தது. ஆனால், அதற்கு பின் நடைபெற்ற சாலை விரிவாக்க பணியின் போது இந்த வேகத்தடை அகற்றப்பட்டது. அதற்கு பின் இப்பகுதி யில் வேகத்தடை அமைக்காமல் அப்படியே விட்டு விட்டதால், அவ்விடத்தில் தொடர்ந்து சாலை விபத்துகள் ஏற்பட்டு வரு கிறது. இதனால் மாணவர்கள் பள்ளிக்குச் செல்லும்போது அச் சத்துடன் சாலையை கடந்து வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள் ளது. எனவே, உடனடியாக பள்ளியின் முன்பு வேகத்தடை அமைக்க வேண்டும் என்று மாணவர்கள் பெற்றோர்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.