பள்ளிபாளையம் ஜூலை 31 – வெளிநாடுகளில் இருந்து தாள் கள் இறக்குமதி செய்கையில், சில நாடுகளில் 5 முதல் 6 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. அவற்றை குறைக்க ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாக, சேசாயி காகித ஆலை மேலாண் இயக்குநர் விஸ்வநாதன் தெரி வித்தார். இந்தியாவில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி தேசிய காகித தினமாக கொண்டாடப்படுகிறது. 1960 ஆம் ஆண்டு, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் எஸ்.விஸ்வநாதன் என்பவரால் காகித ஆலை தொடங்கி வைக்கப்பட்டது. தேசிய காகித தினத்தின் முக்கி யத்துவம் குறித்து பள்ளிபாளை யம் சேசாயி காகித ஆலை மேலாண் இயக்குனர் எஸ்.காசி விஸ்வநா தன் கூறுகையில், காகிதம் ஒரு உன்னதமான பொருள். படிப்ப தற்கும் செய்திகள் மக்களிடம் சென்று சேருவதற்கு பயன்படும். காகிதம் தயாரிப்பதற்கு மரங்க களை வனத்தில் உள்ள மரங்களை வெட்டாமல், தமிழ்நாடு வே ளாண்மை பல்கலைக்கழகத்துடன் இணைந்து, நாங்களே விவசா யிகளிடம் மரக்கன்றுகளை கொடுத்து தகுந்த சவுக்கு உள்ளிட்ட மரக்கன்றுகளை வழங்கி வளர்த்து வருகிறோம். இதன்மூலம் விவசா யிகளுக்கு வருமானமும் கிடைக்கி றது. இந்தியாவிற்கு தாள்களை வெளிநாடுகளில் இருந்து இறக்கு மதி செய்யும் போது, FTA, Free Trade Agreement விதிமுறைப்படி சில நாடுகளில் இருந்து இறக்கு மதி செய்யும் பொழுது இறக்கு மதி வரி கிடையாது. சில நாடுகளில் 5 முதல் 6 சதவீதம் வரி விதிக்கப் படுகிறது. அவற்றை குறைக்க மத் திய அரசிடம் கோரிக்கை வைத்துள் ளோம். மேலும், வெளிநாடுகளிலுள் ளது போல, 99 ஆண்டு காலம் அரசு புறம்போக்கு நிலங்களை, காகித ஆலை நிறுவனங்களுக்கு குத்த கைக்கு வழங்கினால் அதில் மரம் நட்டு வளர்க்க முடியும். அதிக காகி தங்கள் உற்பத்தி செய்ய முடியும். இதனால் காகித தொழில் வளர்ச்சி பெறுவதோடு சுற்றுச்சூழலுக்கும் நன்மை கிடைக்கும். காகித நுகர்வைப் பார்க்கும் பொழுது வளர்ந்துள்ள நாடுகளில் அமெரிக்கா, ஜெர்மனி, இங்கி லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளில் ஆண்டுக்கு 400 கிலோ வரை ஒரு தனிநபர் காகிதத்தை பயன்படுத்து கிறார். சர்வதேச அளவில் சராசரி யாக ஆண்டுக்கு 57 கிலோ காகிதம் பயன்படுத்துகிறார்கள். இந்தியா வில் முன்பு 9 கிலோவாக இருந்தது. இப்போது 15 கிலோவாக உள்ளது. காகிதத்தை தொடர்ச்சியாக பயன் பயன்படுத்தும் பொழுது நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியும் மேம் படும். குழந்தைகள் காகிதத்தில் கையினால் எழுதினால் அவர்க ளுக்கு எழுத்தும், வாசிப்பும் மன தில் பதியும். இங்கிலாந்தில் நடந்த ஆய்வில் பொதுமக்கள், பேப்பர், மொபைல்,லேப்டாப் போன்ற சாத னங்களில் படிப்பதை ஆய்வு செய்த தில் காகித மூலம் படிப்பது, மனதில் பதியும், கண்களுக்கும் பாதுகாப்பு எனவும் தெரியவந்துள்ளது. மின்னணு சாதனங்கள், பிளாஸ் டிக், பொருள்கள் சுற்றுச்சூழலை பாதிப்பு ஏற்படுத்தும். ஆனால் மறு சுழற்சிக்கு பயன்படும் காகிதத்தை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழ லுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்கும். இந்தியாவில் மகாராஷ்டிரா காகித தொழில் உற்பத்தியில் முதல் இடத்தில் உள்ளது. காகிதத்தில் அச்சிடுதல்-எழுதுதல், செய்தித் தாள் பேப்பர், பேக்கிங் பேப்பர், டிஷ்யூ பேப்பர் என 4 வகை உள்ளன. எங்களைப் போன்ற காகித ஆலை நிறுவனங்கள், மரங்களை வெட்டாமல், காடுகளை அழிக்கா மல் மறுசுழற்சி முறையில் பயன் படுத்துகிறோம். காகிதப் பொருட் கள் எளிதில் மக்கும் தன்மை உடை யது. சுற்றுச்சூழலுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லாமல் காகிதங்களை தயாரிக்க முடிகி றது. இனிவரும் காலத்தில் அதிக அளவில் காகிதங்களை பயன்ப டுத்தி நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் நாம் பங்களிப்பு செய்து தர வேண்டும் என்றார்.