உடுமலை, ஆக. 5- கொமரலிங்கம் பகுதியில் வீடு இல் லாத ஏழை விவசாயத் தொழிலாளர்க ளுக்கு தமிழக அரசு இலவச வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் விவசாயத் தொழிலாளர் சங் கத்தின் தலைமையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம், மடத்துக் குளம் தாலுகா கொமரலிங்கம் பேரூராட் சியில் மொத்தம் உள்ள 18 வார்டுகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் மக்கள் அதிகம் விவசாய வேலைகளை மட்டுமே நம்பி இருக்கும் நிலை உள் ளது. இங்கு வீடு இல்லாத ஏழை விவசா யிகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என பலமுறை மடத்துக்கு ளம் வட்டாட்சியிர் மற்றும் வருவாய் கோட்டாட்சியருக்கு மனு அளிக்கப்பட் டுள்ளது. இந்நிலையில் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மடத்துக்குளம் ஒன்றிய துணைத் தலைவர் ஆறுமுகம் தலைமையில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திருப்பூர் மாவட்ட ஆட் சியரிடம் வீட்டு மனை பட்டா கேட்டு மனு அளித்தனர். இதில், திருப்பூர் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் சி. கே.கனகராஜ், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தாலுகா குழு உறுப்பி னர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட திரளான விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.