மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க கோரிக்கை
மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க கோரிக்கை சேலம், ஜூன் 17- ஆத்தூரில் சாலையோர மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சி பகுதியில் கடந்த 2001 ஆம் ஆண்டு அப்போது இருந்த நகர்மன்றத் தலைவர் பி.செங்கோட்டுவேலு தலைமையிலான மன்ற உறுப்பி னர்களால், சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு, தற்போது அவை நன்கு வளர்ந்து காணப்படுகின்றன. இந்நிலையில், சமீப காலமாக வணிகர்கள் சுயலாபத்துக்காக தங்களது அலுவலகம் முன்புள்ள மரங்களை வெட்டியும், திராவகம் ஊற்றி அழித்தும் வருகின்றனர். மறைமுகமாக நடைபெறும் இந்த மரங் களை அழிக்கும் முயற்சியால் நகராட்சி பகுதியில் பகலில் இருக்கும் மரங்கள் மறுநாள் காலையில் காணாமல் போய்வி டுகிறது. ஒருபுறம் ஆத்தூரை பசுமையாக்க ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மறுபுறம் மரங்களை மறைமுகமாக வெட்டும் வேலையை சிலர் செய்து வருகின்றனர். ஆத்தூர் நகராட்சி, 31 ஆவது வார்க்குட்பட்ட பகுதியில், ஞாயிறன்று சிலர் சாலையோர மிருந்த வேப்பமரங்களை பட்டப்பகலிலேயே துணிச்சலாக வெட்டியுள்ளனர். அப்போது பொதுமக்கள் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்ததால் அந்தக் கும்பல் மரங்களை வெட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நகரில் அத்துமீறி மரங்களை வெட்டுவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜூன் 25 முதல் தருமபுரியில் ஜமாபந்தி
ஜூன் 25 முதல் தருமபுரியில் ஜமாபந்தி தருமபுரி, ஜூன் 17- தருமபுரி மாவட்டத்தில் நிகழாண்டுக்கான வருவாய்த் தீர்வாய முகாம் (ஜமாபந்தி) ஜூன் 25 ஆம் தேதியன்ற தொடங்குகிறது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், தருமபுரி மாவட்டத்தில் நிக ழாண்டுக்கான வருவாய்த் தீர்வாய முகாம் (ஜமாபந்தி) ஜூன் 25 ஆம் தேதி தொடங்கி 28 ஆம் தேதி வரை நடைபெற வுள்ளது. ஜூன் 25 ஆம் தேதி பென்னாகரம், ஜூன் 26 ஆம் தேதி பெரும்பாலை, ஜூன் 27 ஆம் தேதி சுஞ்சல் நத்தம், ஜூன் 28 ஆம் தேதி பாப்பாரப்பட்டி ஆகிய பகுதிக ளுக்கான வருவாய் தீர்வாய முகாம் பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. அதே போல பாலக்கோடு, தருமபுரி, நல்லம்பள்ளி, காரிமங்கலம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய வட்டாட்சியர் அலுவல கங்களில் அந்தந்த குறு வட்ட பகுதிகளுக்கான முகாம்கள் நடைபெறுகின்றன. இந்த முகாம் நடைபெறும் நாள்களில் முற்பகலில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்படும். அனைத்து வகையான பொதுமக்களின் குறைகள் தொ டர்பான மனுக்களையும் முகாம் அலுவலரிடம் உரிய ஆவண, ஆதாரங்களுடன் அளித்து, தங்கள் குறைகளை நிவர்த்தி செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாரி, பேருந்து மீது நூற்பாலை வேன் மோதி விபத்து
சேலம், ஜூன் 17- சங்ககிரி அருகே வேகமாக சென்ற தனியார் நூற்பாலை வேன் நிலைதடு மாறி அரசு பேருந்து, லாரி மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளா னதில், 13 பேர் படுகாயமடைந்தனர். சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், இருப்பாளி பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (44). இவர் பள்ளிபாளை யத்தை அடுத்த வெப்படையில் செயல்படும் தனியார் நூற்பாலையில் வேன் ஓட்டுநராகப் பணியாற்றி வருகி றார். இவர் சனியன்று இரவு வழக்கம் போல வேலை நேரம் முடிந்ததும், பணி யாளர்கள் 20 பேரை வேனில் ஏற்றிக் கொண்டு சங்ககிரியிலிருந்து சின்னப் பம்பட்டி நோக்கிச் சென்று கொண்டி ருந்தார். சங்ககிரியை அடுத்த ஒருக்கா மலையில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், எதிரே ஓமலூரிலிருந்து ஈரோடு நோக்கி வந்த அரசு பேருந்தை உரசியபடி சென்று பேருந்துக்கு முன்னால் சென்று கொண் டிருந்த லாரியின் பின்புறத்தில் வேக மாக மோதியது. இவ்விபத்தில் வேனில் பயணித்த ஓட்டுநர் செல்வம், சின்னப்பம் பட்டி பகுதியைச் சேர்ந்த சின்னபிள்ளை (60), பச்சியம்மாள் (55), இருசாயி (65), மாரியம்மாள் (60), அமராவதி (57), தங்கம்மாள் (40), பெருமாயி (56), தங்கபொண்ணு (47), லட்சுமி (48), சின்னபையன் (67), விஜயா (40) உள்ளிட்ட தொழிலாளர்களும், பேருந் தில் பயணம் செய்த தாரமங்கலத் தைச் சேர்ந்த தமிழரசி (41) என்பவ ரும் பலத்த காயமடைந்தனர். இதைய டுத்து காயமடைந்த 13 பேரும் தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்து வமனைக்கு கொண்டு செல்லப்பட்ட னர்.
497 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: 2 பேர் கைது
நாமக்கல், ஜூன் 17- கொக்கராயன்பேட்டை அருகே குடோன் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டி ருந்த 497 கிலோ புகையிலைப் பொருட் களை பறிமுதல் செய்த காவல் துறையி னர், இதில் தொடர்புடைய 2 பேரை கைது செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் உத்தரவிட்டுள் ளார். அதன்பேரில் திருச்செங்கோடு உட் கோட்ட காவல் துணை கண்காணிப்பா ளர் இமயவரம்பன் தலைமையில், போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திருச்செங்கோடு உட்கோட்டம், மொளசி காவல் நிலைய எல்லைக் குட்பட்ட கொக்கராயன்பேட்டை சாலை யிலுள்ள தொட்டிக்காரன் பாளையத் தில் ஒரு குடோனில் புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ள தாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், பள்ளிபாளை யம் காவல் ஆய்வாளர் சரவணன், மொளசி காவல் உதவி ஆய்வாளர் சங்கீதா ஆகியோரை கொண்ட தனிப்ப டையினர், தொட்டிக்காரன் பாளையம் பகுதிக்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங் குள்ள தனபால் என்பவருக்கு சொந்த மான குடோனில் சுமார் 100 மூட்டைக ளில் 497 கிலோ புகையிலைப் பொருட் கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த காவல் துறையினர், குடோனை வாடகைக்கு எடுத்து புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த ஏமப்பள்ளி அருகே உள்ள அத்தமா பாளையம் பகுதியைச் சேர்ந்த ரங்க சாமி (35), குமாரபாளையம், பாலப் பட்டி பகுதியைச் சேர்ந்த அரவிந்தன் (29) ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து இருவரையும் குமாரபாளை யம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி, நீதிபதி உத்தரவின் பேரில் இருவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் திருச்செங்கோடு கிளைச்சிறையில் அடைத்தனர்.
கனமழையால் சாலைகளில் தத்தளித்த வாகனங்கள்!
கனமழையால் சாலைகளில் தத்தளித்த வாகனங்கள்! உதகை, ஜூன் 17- உதகையில் பெய்த கனமழையால் சாலைகளில் தேங்கி நின்ற தண்ணீரில் தத்தளித்தவாறு வாகனங்கள் சென்றன. கேரளாவை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் தொடங்கிய தென்மேற்கு பருவமழை, கடந்த வாரம் நீலகிரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் தீவிரமாக பெய்தது. இதைத் தொடர்ந்து, நீலகிரியில் கடந்த ஒரு வாரமாக மழைப்பொ ழிவு குறைதது. இந்நிலையில், தென்கிழக்கு அரபிக்கடல் மற் றும் அதனை ஒட்டிய கேரள கடலோரப்பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஜூன் 21 ஆம் தேதியன்று வரை தமிழ்நாட்டில் இடி மற்றும் மின்ன லுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூ டும் என்றும், இயல்பைவிட ஒரு சில இடங்களில் 3 டிகிரி செல்சி யஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதன்படி, நீலகி ரியில் சனி மற்றும் ஞாயிறன்று வரை மிதமான மழை பெய்தது. ஆனால், திங்களன்று திடீரென மதியம் ஒரு மணி நேரம் வரை தொடர் கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சாலைகளில் தண்ணீர் தேங்கி நின் றது. உதகை ரயில் நிலைய மேம்பாலத்தின் கீழ் தேங்கின்ற தண்ணீரில் வாகனங்கள் தத்தளித்தவாறு சென்றன. ரயில் நிலைய காவல் நிலையத்தை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் உதகை ரயில் நிலையத்தில் நடை பெற்று வரும் பணிகள் பாதிக்கப்பட்டன. இதேபோல், கனமழை காரணமாக உதகை மார்க்கெட்டுக் குள் வெள்ளம் ஆறாக ஓடியதால், அங்கிருந்த வியாபாரி கள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். காய்கறிகள், பழங் கள் தண்ணீரில் மூழ்கி வீணாகின. உதகை அப்பர் பஜாரில் உள்ள நடைபாதையில் மழை வெள்ளம் ஆறாக ஓடியது. மழை காரணமாக படகு இல்லத்தில் ஒரு மணி நேரம் படகு சவாரி நிறுத்தப்பட்டது. தாவரவியல் பூங்காவில் குடைகளை பிடித்த படி சுற்றுலாப் பயணிகள் பூங்காவை சுற்றி வந்தனர். இதே போல், சுற்றுவட்டார பகுதிகளான குன்னூர், கேத்தி உள்ளிட்ட பகுதிகளிலும் லேசாக மழை பெய்தது. நீலகிரி உள்ளிட்ட பகுதி களில் செவ்வாயன்றும் (இன்றும்) மழைக்கு வாய்ப்பு இருப்ப தாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத் தக்கது.
உதகைக்கு செல்ல புதிய சாலை அமைக்கும் பணி தீவிரம்
உதகைக்கு செல்ல புதிய சாலை அமைக்கும் பணி தீவிரம் உதகை, ஜூன் 17- சமவெளி பகுதிகளிலிருந்து உதகைக்கு செல்லும் புதிய சாலை அமைக்கும் பணி 95 சதவிகிதம் முடிவடைந்த நிலை யில், இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின் றன. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரம் முதல் தென்மேற்கு பருவமழை துவங்கும். இதனால் சாலை யில் ஆங்காங்கே மரங்கள் விழுவது, பாறைகள் உருண்டு விழுவது, மண் சரிவுகள் போன்றவைகள் ஏற்படுவதால், உத கைக்கு குன்னூர் வழியாக செல்லும் பாதையில் கடும் நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகளும், சுற்றுலாப் பயணிக ளும் கடும் அவதியடைகின்றனர். இதனை தவிர்க்கும் வகை யில், குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையில், காட்டேரி சந்திப்பு பகுதியில் இருந்து மஞ்சூர் வழியாக உதகைக்கு ரூ.46 கோடி மதிப்பீட்டில் மாற்று சாலை அமைக்கும் பணி கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. தற்போது, உதகையிலிருந்து மஞ்சூர் செல்லும் சாலையில் கொல்லி மலை சாலை சந்திப்பு பகுதி முதல் கொல்லிமலை வரையில் சாலை அகலப்படுத்தும் பணிகள், கொண்டை ஊசி வளைவு அமைக்கும் பணிகள் மற்றும் புதிதாக சாலை அமைக்கும் பணி கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாற்று சாலை அமைக் கும் பணிகள் 95 சதவிகிதம் நிறைவடைந்துள்ளது. இச்சாலை திறக்கப்பட்டால், மேட்டுப்பாளையம் மற்றும் கோவை போன்ற சமவெளிப்பகுதிகளில் இருந்து வரும் கனரக வாக னங்கள் அனைத்தும், குன்னூர் மற்றும் உதகை நகருக்குள் வராமல் கூடலூர், மைசூர் மற்றும் கேரளம் மாநிலங்க ளுக்கு எளிதாக செல்ல முடியும். இதனால், உதகை - குன்னூர் சாலையில் வாகன போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறைய வாய்ப்புள்ளது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகை யில், ‘குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையில் காட்டேரி பகு தியில் இருந்து சேலாஸ், கெந்தளா, பாலாடா, கொல்லி மலை வழியாக உதகை - மஞ்சூர் சாலையில் காந்திப்பேட்டை பகுதி வரை 20.5 கி.மீ., தூரத்திற்கு சாலை அமைக்கப்பட்டு வரு கிறது. இச்சாலையில் 138 சிறிய பாலங்கள் அமைக்கப்பட் டுள்ளது. ஏற்கனவே இருந்த 3.75 மீட்டர் அகலம் இருந்த சாலை தற்போது 7 மீட்டர் சாலையாக அகலப்படுத்தப்பட்டு இரு வழிச் சாலையாக மாற்றப்பட்டுள்ளது. அதேபோல், விவசாயிகள் தங்கள் பகுதிகளில் உள்ள காய்கறிகளை நகர் பகுதிகளுக் குள் வராமல், லாரிகள் மூலம் இச்சாலையில் கொண்டு செல்ல லாம். இதேபோல், கூடலூர், கேரளா மற்றும் கர்நாடக மாநி லங்களுக்கு செல்லும் கனரக வாகனங்கள் உதகை, குன்னூர் போன்ற நகர் பகுதிகளுக்குள் வராமல், எளிதாக புறநகர் வழி யாக செல்லலாம். 95 சதவிகிதம் சாலை சீரமைக்கும் பணிகள் நிறைவடைந்த நிலையில், தென்மேற்கு பருவமழை துவங் கும் முன் இச்சாலை சீரமைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன் பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது, என்றனர். இச்சாலை சீரமைப்புப் பணிகள் முடிந்தால், கனரக வாக னங்கள் மட்டுமின்றி, சீசன் சமயங்களில் சிறிய வாகனங்கள் மற்றும் கிராமப்புறங்களில் இருந்து சமவளெிப்பகுதிகளுக்கு செல்லும் வாகனங்களும் நெரிசலில் சிக்காமல் செல்வது மட்டு மின்றி, நேரத்தையும் மிச்சப்படுத்த முடியும் என்பதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உதகையில் ‘ஸ்ட்ராபெர்ரி’ சீசன் துவங்கியது
உதகை, ஜூன் 17- உதகையில் ஸ்ட்ராபெர்ரி சீசன் துவங்கியுள்ள நிலையில், பழங்களை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடு பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் தேயிலை, மலை காய்கறிக்கு அடுத்தபடியாக சீச்சீஸ், பிளம்ஸ், ஸ்ட்ராபெர்ரி போன்ற பழவகைகள் விளைவிக்கப்பட்டு வருகிறது. இந்த பழவ கைகளை உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவு வாங்கி செல்கின்றனர். உதகை மற்றும் அதன் சுற்றுவட் டாரப் பகுதிகளான சோலூர், எல்லநள்ளி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில், ஸ்ட்ராபெர்ரி பழவகைகள் ஏக்கர் கணக்கில் பயிரி டப்பட்டு உள்ளன. தற்போது குளிர் மற்றும் மழைக்காலம் என்ப தால், உதகையில் ஸ்ட்ராபெர்ரி பழசீசன் தொடங்கியுள்ளது. பழங்களை அறுவடை செய்து விற்பனை செய்யும் பணி யில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து ஸ்ட்ரா பெர்ரி பயிரிட்டிருக்கும் விவசாயிகள் கூறுகையில், ஸ்ட்ரா பெர்ரி பயிரிட்ட 3 மாதங்களுக்கு பிறகு பழங்களை அறுவடை செய்ய முடியும். ஒருநாள் விட்டு ஒருநாள் பழங்களை அறு வடை செய்யலாம். உதகை உள்ளிட்ட பல்வேறு பகுதிக ளில் இருந்தும் வியாபாரிகள் நேரடியாக விவசாய நிலங்க ளுக்கு வந்து, ஒரு கிலோ ஸ்ட்ராபெர்ரி பழங்களை ரூ.300 வரை கொள்முதல் செய்து கொண்டு செல்கின்றனர். அவை, நீலகி ரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விற்பனை செய்யப்ப டுகிறது. மேலும், வெளி மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக் கப்பட்டுகின்றன. ஸ்ட்ராபெர்ரி பயிர்களுக்காக அமைக்கப் பட்டுள்ள பசுமைக்குடில்களை சுமார் 10 ஆண்டுகள் வரை பயன்படுத்த முடியும், என்றார்.
மாணவனுக்கு பாலியல் தொல்லை
மாணவனுக்கு பாலியல் தொல்லை உதகை, ஜூன் 17- உதகையில் பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை அளித்த விடுதி காப்பாளரை காவல் துறையினர் கைது செய்தனர். வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு ஆசிரியர் தம்பதியின் 15 வயது மகன் உதகையிலுள்ள பிரபல தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். இதற்காக அந்த மாணவன் பள்ளி விடுதியில் தங்கியுள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்க ளுக்கு முன்பு பள்ளியில் உள்ள நீச்சல் குளத்தில் குளிப்பதற் காக அந்த மாணவன் சென்றார். குளித்துவிட்டு திரும்பி வந்த போது, பள்ளியில் காப்பாளராக பணிபுரிந்து வந்த அலிஸ்டர் டி சில்வா அந்த மாணவனுக்கு பாலியல் தொல்லை அளித் துள்ளார். இச்சம்பவம் குறித்து அந்த மாணவன் தனது தோழி யிடம் செல்போன் மூலம் தெரிவித்துள்ளார். இதைத்தொ டர்ந்து, அவருடைய தோழியின் பெற்றோர் மூலம் இந்த தகவல் தனியார் பள்ளியின் தலைமை ஆசிரியர் கவனத்திற் கும், பள்ளி மாணவனின் பெற்றோர் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. பின்பு மாணவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பள்ளி நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு அலிஸ்டர்டிசில்வாவை பணி நீக்கம் செய்தனர். மேலும், உதகை துணை காவல் கண்காணிப்பாளர் யசோதா உத்தர வின் பேரில், உதகை மகளிர் காவல் ஆய்வாளர் முத்துமாரியம் மாள் தலைமையிலான போலீசார் போக்சோ சட்டத்தில் வழக் குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
மாட்டை திருடி விற்ற 6 பேர் கைது
மாட்டை திருடி விற்ற 6 பேர் கைது தருமபுரி, ஜூன் 17- மாரண்டஅள்ளி அருகே பசுமாட்டை திருடி விற்ற 6 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே உள்ள பன்னி அள்ளி கிராமத்தைச் சேர்ந்த அங்கப்பன் (72) என்பவர், பசு மாடுகளை வளர்த்து வருகிறார். கடந்த ஜூன் 14 ஆம் தேதி யன்று இரவு தனது விவசாய நிலத்தில் உள்ள மாட்டு கொட்ட கையில் தலா ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள 2 கறவை மாடுகளை கட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். இதையடுத்து அடுத்த நாள் காலை சென்று பார்த்தபோது, 2 கறவை மாடுகளும் காணமல் போனது தெரியவந்தது. இதுகுறித்து அவர் மாரண்டஅள்ளி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், சந்தேகத்தின் பேரில் மாரண்டஅள்ளி அருகே உள்ள சந்திராபுரத்தைச் சேர்ந்த முரளிதாஷ் (22), வெலாங்காடு கிராமத்தைச் சேர்ந்த சக்தி வேல் (24), அஜீத் (23), கிருஷ்ணகிரி மாவட்டம், சொன்னம் பட்டி கிராமத்தைச் சேர்ந்த தனுஷ் (25), முருகேசன் (44), பால நாயக்கனஅள்ளியைச் சேர்ந்த சேட்டு (26) ஆகிய 6 பேரை யும் பிடித்து விசாரித்தனர். அதில் 6 பேரும் கூட்டாக சேர்ந்து மகேந்திரமங்கலம், பஞ்சப்பள்ளி, மாரண்டஅள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் மினி சரக்கு வாகனத்தின் மூலம் கறவை மாடுகளை திருடிசென்று வெளியூர் சந்தைகளில் விற்று வந்தது தெரிய வந்தது. இதையடுத்து 6 பேரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி, தருமபுரி சிறையில் அடைத்தனர்.
ஜூன் 22 இல் மாநில அளவிலான களரி போட்டி
ஜூன் 22 இல் மாநில அளவிலான களரி போட்டி உடுமலை, ஜூன் 17- மாநில அளவிலான களரி போட்டி, கணியூரில் ஜூன் 22 ஆம் தேதி நடைபெற உள்ளது. களரி பயட்டு அசோசியேசன் ஆப் தமிழ்நாடு சார்பில், 7 ஆவது மாநிலம் தழுவிய களரி சாம்பியன்ஷிப் போட்டிகள் வரும் ஜூன் 22 ஆம் தேதியன்று, திருப்பூர் மாவட்டம், உடு மலை அருகே உள்ள கணியூர் சோழமாதேவி அக்க்ஷர மஹா லில் நடைபெற உள்ளது. கேரளா, திருவனந்தபுரம் இந்தியன் களரி பயட்டு பெடரேசன் செயலாளர் வக்கீல் கே.பி.பூந்துறை சோமன் தலைமையிலும் இப்போட்டி நடைபெற உள்ளது. மடத்துக்குளம் மாவட்ட உரிமையியல் நீதிபதி கே.விஜய குமார், உடுமலை காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுகு மாரன் ஆகியோர் போட்டிகளை துவக்கி வைக்கின்றனர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் ஈஸ்வரன், பொள்ளாச்சி நாடா ளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி உட்பட பலர் கலந்து கொண்டு, பரிசுகளை வழங்குகின்றனர். இதற்கான ஏற்பாடு கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.