திருப்பூர், ஜூலை 2 - குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஸ்ரீ மஹா கணபதி நகர் பொதுமக்கள் திங்க ளன்று மனு அளித்துள்ளனர். இது குறித்து பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்ப தாவது, பல்லடம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, மந்திரிபா ளையம் ஸ்ரீ மகா கணபதி நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தண்ணீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தண்ணீர் வருவதில்லை. இதனால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். போதுமான தண்ணீர் தொட்டிகளும் இல்லை. அதேபோல, இப்பகுதியில் மின் கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளது. பலத்த மழை காற்று பெய்தால் மின்கம்பங்களால் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே முறையாக தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல சாய்ந்து உள்ள மின்கம்பங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.