districts

சிதிலமடைந்த குடியிருப்புகள் மறு கட்டுமானம் செய்யக் கோரிக்கை

ஈரோடு, ஆக. 27- ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்தி ரத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் மிகவும் பழுத டைந்த நிலையில் இருப்பதால், இதனை மறு கட்டுமானம் செய்து குடியமர்த்த வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. வீரப்பன்சத்திரம் பேரூராட்சியி லிருந்த குடிசைப் பகுதியை அடுக் குமாடி குடியிருப்பாக மாற்ற கலை ஞர் 1989ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். அன்று ஒரு கோடியே 5 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப் பில் திட்டம் தயாரானது. அதன் பின் னர் 3 ஆண்டுகள் கழித்து ஒரு கட்ட டத்திற்கு 16 வீடுகள் கொண்ட 16 கட்டடங்கள் கட்டப்பட்டு 256 வீடு கள் திறக்கப்பட்டது. 90 சதுர அடி யில் வீட்டின் பரப்பளவை கொண்டு, ஒரு அறையை மட்டுமே கொண்ட தாகவும் இருந்தது. குருவிகள் கூட் டில் அடைவதுபோல் வேறு வழி யில்லாத பட்டியலின மக்கள் அதற் குள் வசிக்கின்றனர். இதற்கிடையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின்போது தமிழ் நாடு முதலமைச்சர் பிரச்சாரத்திற்கு வந்தபோது, 90 சதுர அடி கொண்ட வீட்டிற்குள் சென்றார். அங்கு வசிப்பவர்களிடம் வாக்கு களையும், குறைகளையும் கேட் டார். அப்போது, இடவசதியின்மை, பழுதடைந்துள்ளது குறித்து அப்பகுதி மக்கள் கோரிக்கைவைத் தனர். இதனை செவிமடுத்த முதல் வர், அமைச்சர் சு.முத்துசாமி மற்றும் துறையினரிடம் கூறி நடவ டிக்கை எடுப்பதாக உறுதியளித் தார். அதன்பிறகு சில மாதங்க ளில் அடுக்குமாடி புது வண்ணங்க ளைப் பூசிப்பட்டது. முன்னதாக வெளிப்புறத்தின் பழுதுகள் பூசி மொழுகப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்க ளுக்கு முன் பெய்த மழையில் மீண்டும் இடிபாடுகள் ஏற்பட்டது. மூன்றாவது மாடியிலிருந்த ஒரு வீட்டின் குளியலறையில் மேற் கூரை இடிந்து ஒரு பெண்ணின் கழுத்தில் விழுந்தது. ஆனால் அவர் தையல் போட்டு உயிர் பிழைத்தார். மேலும் சில வீடுகளிலும் இது போன்ற நிலையே உள்ளது. இங்கு வாழும் மக்கள் எப்போதும் அச்ச உணர்வுடனே வாழ வேண்டிய நிலை உள்ளது.  இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், எங்கள் கோரிக் கையை அதிகாரிகள் சென்னைக்கு  அனுப்பி அங்கிருந்து ஒப்புதல் பெற வேண்டும் என்கின்றனர். முதலமைச்சரே நேரில் வந்து பார்த்துச் சென்றார். அதன் பிறகும்  முறையிட்டு வருகிறோம். ஆக்கிர மிப்புகளை அகற்றி, பழுதடைந்த கட்டடங்களை இடித்து விட்டு மறு கட்டுமானம் செய்ய வேண்டும். இத்துறைக்கு பொறுப்பான அமைச்சரே எங்கள் ஊர் என்ப தால் அவர் இவ்விசயத்தில் அதிக அக்கறை எடுக்க வேண்டும் என்ற னர்.