districts

img

விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி தொகையை வழங்க வலியுறுத்தல்

திருப்பூர், நவ. 24 – தமிழ்நாடு அரசு கடன் தள்ளுபடி சான்றிதழ் பெற்ற விவசாயிகளுக்கு, கடன் தள்ளுபடி தொகையை விரைந்து வழங்குமாறு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் வெள்ளியன்று மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற் றது. இக்கூட்டத்தில் விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன் அளித்த மனுவில், இது குறித்து வற்புறுத்தி இருக்கிறார். தமிழக அரசு கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி வரை  நிலுவையில் உள்ள விவசாய பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்து அர சாணை வெளியிட்டது. இதை அறி யாத விவசாயிகள் பலர் அரசு வழங் கும் வட்டிச் சலுகை கிடைக்கும் என்ற  எதிர்ப்பார்ப்பில் வெளிக் கடன்  பெற்று பயிர்க் கடனை அடைத்துள்ள னர். அதேசமயம் அரசு அவர்களது கடன்களைத் தள்ளுபடி செய்து சான் றிதழ் வழங்கியிருப்பதுடன், அவர்க ளுக்கு உரிய கடன் தொகையையும் சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்க ளுக்கு விடுவித்துள்ளது. அதை தனிக்  கணக்கில் வைத்து இதுநாள் வரை  விவசாயிகளுக்கு திரும்ப வழங்கா மல் உள்ளனர். இது குறித்து விவசாயிகள் குறை தீர்க் கூட்டத்தில் கடந்த மூன்று மாத  காலமாக மனுக் கொடுத்து கோரிக்கை விடுத்தும் அரசு நிர்வாகம்  உரிய பதில் அளிக்காமல் உள்ளனர்.  மத்திய கூட்டுறவு வங்கியின் சுற்ற றிக்கை பெற்று நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என்று பதில் கூறப்பட் டது. எனினும் மத்திய கூட்டுறவு வங்கி யும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த ஆண்டு உரிய நேரத்தில்  மழை பெய்யாத நிலையில் கடும்  வறட்சியில் விவசாயிகள் ஆழ்கு ழாய் அமைத்தும், தண்ணீரை விலைக்கு வாங்கியும் நீண்ட காலப் பயிரான தென்னையைக் காப்பாற்ற பெரும் செலவு செய்துள்ளனர். இத னாலும் இழப்பைச் சந்தித்து வரு கின்றனர். எனவே அரசு நிர்வாகம் விவசாயிகளின் பணமான தள்ளுபடி செய்யப்பட்ட கடன் தொகையை உரியவர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்று மதுசூத னன் வலியுறுத்தினார்.

இதில், கரும்பு விவசாயிகள் சங்க  தலைவர் பாலதண்டபாணி கூறிய தாவது: கிருஷ்ணாபுரம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை பிழிதிறன் குறைந்துவிட்டதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். நாளொன்றுக்கு 1250 மெட்ரிக் டன்  அரவை திறன் கொண்ட ஆலையில்  கடந்த 2022 – 23 ஆண்டில் 650 மெட்ரிக்  டன் மட்டுமே அரவை செய்யப்பட்டு மொத்தம் 42ஆயிரத்து 546 டன் அரைக்கப்பட்டது. இதனால் கரும்பு பல நாட்கள் வயலில் காய்ந்து அர வைக்கு எடுக்கப்பட்டது. கரும்பு வெட்டாட்கள், விவசாயிகள், லாரி ஓட்டுநர்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். எனவே ஆலையை முழுமை யாக புனரமைக்க வேண்டும். இதற்கு  ரூ.56 கோடி ஒதுக்க வேண்டும் என  கரும்பு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்தது. ஆனால் ஆலை சுத்திகரிப்புப் பணிக்கு என்று  ரூ.6.75 கோடி அரசு நிதி ஒதுக்கியுள் ளது. இதனால் ஆலையைப் புனர மைக்க முடியாமல் முழு திறனை எட்ட  முடியாத நிலையில் உள்ளது. இப் போது சுத்திகரிப்புத் தொகை ஒதுக்கு வது என்பது புனரமைக்க இயலாது என்பதையே காட்டுகிறது. இதனால்  கரும்பு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர். தற்காலிக நிவாரண  நடவடிக்கைகளுக்குப் பதிலாக முழு மையாக நவீனப்படுத்த அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று பால தண்டபாணி கூறினார்.  வெள்ளகோவில் பகுதி பிஏபி விவசாயிகள், முறையாக தண்ணீர் வழங்க கோரி தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.