உடுமலை, பிப்.14 - 2014 ஆம் ஆண்டு சாலையோர வியா பாரிகள் ஒழுங்குபடுத்துதல் சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்த வேண் டும் என உடுமலை சிஐடியு நடைபாதை வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் 14 ஆம் தேதி உடுமலை நகராட்சி அலுவ கத்தின் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அம்மா உணவகத்தில் இருந்து நகராட்சி அலுவலகம் வரை தொழிலாளர்கள் பேரணியாக சென்று, ஆர்ப்பாட்டம் நடத் தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் 2014 ஆம் ஆண்டு சாலையோர வியாபாரி கள் ஒழுங்குபடுத்துதல் சட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும். உடுமலை நகர பகுதியில் வியாபாரம் செய்யும் சாலையோர வியாபரிகள் மற் றும் தொழிலாளர்களை முறையாக கணக்கெடுப்பு செய்ய வேண்டும். அனைத்து வியாபாரிகளுக்கும், நக ராட்சி நிர்வாகமே தள்ளுவண்டி வழங்க வேண்டும். விற்பனைக்குழு கூட்டத்தை குறிப்பிட்ட இடைவெளியில் நடத்த வேண்டும். அனைவருக்கும் அரசு வங்கி களில் மானியத்தில் கடன் வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விற்ப னைக்குழு உறுப்பினர் பாபு தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் ஜெகதீசன், மாவட்டக்குழு உறுப்பினர் விஸ்வநாதன், நடைபாதை சங்க நிர்வாகிகள் ஆஜீக் ஆலி, அபுபக் கர் சித்திக், பொது தொழிலாளர் சங்க நிர்வாகிகள் ரங்கநாதன், ஜோசப், சாமி துரை சந்தை சங்கத்தின் சாதிக் அலி, கருத்தோவியன் உள்ளிட்ட திரளான நடைபாதை வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டார் கள்.