districts

img

ஊத்துக்குளி ஆர்.எஸ். குன்னத்தூர் சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதை அப்புறப்படுத்த கோரிக்கை

திருப்பூர், நவ. 13 ஊத்துக்குளி ஆர்.எஸ். குன்னத் தூர் சாலையில் மழைநீர் தேங்கி  நிற்பதை அப்புறப்படுத்த ஊத்துக் குளி பேரூராட்சி நிர்வாகமும், ஊத்துக்குளி நெடுஞ்சாலை துறை யும் நடவடிக்கை எடுக்க வேண்டும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்து உள்ளது. திருப்பூர் மாவட்டம், ஊத்துக் குளி பேரூராட்சி, ஊத்துக்குளி ஆர்.எஸ். குன்னத்தூர் சாலையில் சிறிது மழை வந்தாலும் தார்ச்  சாலையின் நடுப்பகுதி வரை தண்ணீர் தேங்கி நின்று போக்கு வரத்துக்கு மிகப்பெரிய இடையூ றாக உள்ளது. இந்தநிலை கடந்த ஓராண்டாக நீடித்து வருகிறது. மழைநீர் தேங்கி நிற்கும் போது  பாதசாரிகள் மற்றும் இருசக்கர  வாகன ஓட்டிகள் தார்ச்சாலையின் நடுப்பகுதியை பயன்படுத்த வேண்டி உள்ளது. இதனால் கோபி- தாராபுரம் பிரதான சாலையில் வரும் வாகனங்களால் விபத்து  ஏற்பட்டும் அபாயம் உள்ளது.  இதை பேரூராட்சி நிர்வாகம் கவனத்தில் கொள்ள வேண்டும். இதுகுறித்து ஊத்துக்குளி பேரூ ராட்சி செயல் அலுவலரிடமும், ஊத்துக்குளி பிரிவு நெடுஞ்சாலை உதவி பொறியாளர் இடத்திலும் பலமுறை எடுத்துச் சொல்லியும் நடவடிக்கை இல்லாமால் இந்த  நிலை நீடிக்கிறது. பிரதான சாலை யில் பொது மக்களுக்கு ஒரு பாதிப்பு  என்று தெரிந்தும் தேங்கி நிற்கும் நீரை அப்புறப்படுத்துவதற்கும், வருகின்ற மழைநீர் தேங்காமல் வழிந்து ஓடுவதற்கும் உரிய ஏற்பாடு களை பேரூராட்சி நிர்வாகமும், நெடுஞ்சாலை துறை நிர்வாகம் மேற்கொள்ளவில்லை என்பது வருந்தத்தக்கது. 

சில மாதங்களுக்கு முன்பு குன்னத்தூர் சாலையில் வலது புறத்தில் பாரத் பிரிண்டர் முதல் மணி பேக்கரி வரை சாக்கடை அமைப்பதற்கு நமக்கு நாமே திட்டத்தில் பங்குத்தொகை ஊத்துக்குளி பேரூராட்சிக்கு செலுத்தப்பட்டு, அதற்கான டெண்டர் விடப்பட்டு, வேலை உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. வேலை உத் தரவு வழங்கப்பட்டு பல மாதங் களாக சாக்கடை பணி துவங் காமல் இருப்பது எதற்காக, நமக்கு  நாமே திட்டத்தில் எந்த நோக்கத் திற்காக தனியார் ஒருவர் பணம் செலுத்தினாரோ (ஒரு பங்கு) அந்தப் பணமும், அரசிலிருந்து ஒதுக்கப்பட்ட பணமும் (இரண்டு பங்கு) வீணாக தேங்கி கிடக் கிறது.  இந்தநிலை எதனால் என சிந்தித்து பார்க்க வேண்டும். திட்டங் களை செயல்படுத்த வேண்டிய  நிலையில் இருக்கிற செயல் அலு வலரும், பேரூராட்சி நிர்வாகமும் சம்பந்தப்பட்ட துறையினுடைய பொறியாளர்களும் இதுகுறித்து ஏன் கவலை கொள்ளவில்லை. மழைக்காலங்களில் சாலைகளில்  தண்ணீர் தேங்கி நின்று பொது மக்களுக்கு ஒரு பாதிப்பு ஏற்ப டுத்தும் என முன்னதாக இந்த பணி களை முடிக்க வேண்டும் என்று ஏன் அக்கறை கொள்ளவில்லை,

இந்த போக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.  ஆகவே ஊத்துக்குளி பேரூ ராட்சி நிர்வாகமும், ஊத்துக்குளி பிரிவு நெடுஞ்சாலைத்துறை அலுவ லரும் குன்னத்தூர் சாலையில் மழைநீர் தேங்காமல் தடுப்பதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள  வேண்டும். அத்துடன் ஊத்துக்குளி பேரூராட்சி நிர்வாகமும், செயல் அலுவலரும், சம்பந்தப்பட்ட பொறி யாளர்களும், இந்த வேலையை எடுத்துள்ள ஒப்பந்ததாரரும், நமக்கு நாமே திட்டத்தில் போடப் பட்ட சாக்கடை திட்டப்பணியை விரைவாக நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின்  ஊத்துக்குளி ஆர்.எஸ். கிளை சார்பில் வி.கே. பழனி சாமி கேட்டுக் கொண்டிருக்கிறார். மக்களுடைய பிரச்சனைகளை அலட்சியப்படுத்துகிறபோது மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களை  திரட்டி போராட்ட நடவடிக்கையில் இறங்கும் என்பதையும் தெரியப் படுத்திக் கொள்வதாக அவர் கூறி  இருக்கிறார்.