districts

img

தாராபுரம் பழைய அமராவதி ராஜவாய்க்காலில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற கோரிக்கை

தாராபுரம், நவ.30- தாராபுரம் பகுதி விவசாயிக ளுக்கு நீராதாரமாக விளங்கும் ராஜ வாய்க்காலில் சாக்கடை கழிவுகள், மருத்துவமனை கழிவுகள் மற்றும்  பிளாஸ்டிக் கழிவுகளால் மாசடைந்து  வருகிறது. தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அமராவதி ஆறு செல்லும் வழி யில் உள்ள விவசாய நிலங்கள் பயன் பெறும் வகையில் வாய்க்கால்கள் ஏற் படுத்தப்பட்டு அதன் மூலம் ஆயிரக்க ணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தாராபுரம் சுற்றுவட் டாரத்தில் வாய்க்கால் பாசனத்திற்கு  ஆதாரமாக விளங்கும் பிரதானமான  பழைய ராஜவாய்க்கால் பெரும்பள் ளம் என்ற இடத்தில் இருந்து துவங்கி  தாராபுரம் வழியாக பயணித்து முடி வில் தாராபுரம் அருகில் உள்ள உப் பாற்றில் கலக்கிறது. அதேபோல் அம ராவதி ஆற்றில் இருந்து அலங்கியம் சீத்தக்காடு பகுதியில் துவங்கி தாரா புரம் வழியாக பயணித்து கருப்பம்பா ளையம் என்ற இடம் அருகே மீண்டும்  அமராவதி ஆற்றில் கலக்கிறது.  இந்த இரண்டு வாய்க்கால்களின் மூலம் தாராபுரம் தாலுகாவிற்குட் பட்ட பழைய ஆயக்கட்டு பாசன பகுதி களான அலங்கியம், தளவாய்ப்பட் டிணம், தாராபுரம், கொளிஞ்சிவாடி, கொளத்துப்பாளையம், வீராட்சிமங் கலம், கரையூர், ராமபட்டிணம், கருப் பம்பாளையம் உள்ளிட்ட சுமார் 5 ஆயி ரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட பாசன  பகுதிகள் பயன்பெற்று வருகின்றன. இதில், பயிர்களுக்கு உயிர் ஆதார மாக விளங்கும் இந்த வாய்க்கால்கள் தற்போது சாக்கடை, அரசு மருத் துவமனை கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகளால் தொடர்ந்து மாசடைந்து வருகிறது.

தாராபுரம் நகரில் உள்ள நகராட்சி  பகுதி சாக்கடை கழிவுநீர் மொத்த மாக இந்த வாய்க்காலில் கலக்கிறது.  மேலும் தாராபுரம் அரசு மருத்துவ மனை மருத்துவ கழிவுகளும் வாய்க் காலில் கலந்து வாய்க்கால் சாக்கடை யாக மாறி வருகிறது. மேலும் நகரவா சிகள் கோழி இறைச்சி கழிவுகள், குப் பைகளையும் வீசிச்செல்கின்றனர். வாய்கால் மேட்டில் அமர்ந்து மது  அருந்தும் குடிகாரர்கள் பாட்டில்க ளையும் தண்ணீர் பாட்டில்களையும் வாய்க்காலில் வீசிவிடுகின்றனர். தற் போது அமராவதி ஆற்றில் இருந்து வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப் பட்டுள்ளதால் வாய்க்காலில் கொட் டப்பட்ட கழிவுகள் வாய்க்கால் பாலங் களின் கீழ் வெளியேற முடியாமல் அடைத்து நிற்கிறது. இந்நிலையில் நெல் நடவுக்காக விவசாயிகள் தீவி ரமாக உழவு பணியை மேற்கொண்டு  நாற்றங்காலில் நெல் நடவுக்காக தயார் செய்து வருகின்றனர். தண்ணீர்  கடைமடை பகுதி வரை செல்லவேண் டுமானால் இந்த பிளாஸ்டிக் கழிவு களை அகற்ற வேண்டும். மேலும் இந்த கழிவுகளால் விவசாய நிலங் கள் பாழாவதோடு பயிர்களும் பாதிக் கப்படும். மருத்துவமனை கழிவுகள் மனிதர்களுக்கு தோல் நோய் உள் ளிட்ட பல்வேறு நோய்களை உரு வாக்கும் அபாயம் உள்ளது. எனவே  பொதுப்பணித்துறையினர் வாய்க் காலை தூர்வாரி குப்பைகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.