கோவை, செப்.9- வாடகை கட்டடத்தில் இயங்கும் நியாய விலைக் கடையை முன்னாள் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி. ஆர்.நடராஜன் தொகுதி மேம்பாட்டு நிதி யில் புதிதாக கட்டப்பட்டுள்ள இடத் திற்கு மாற்றக்கோரி வழங்கல் அதிகாரி யிடம் மனு அளித்தனர். மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை கிழக்கு நகரக்குழு உறுப்பினர் த. நாகராஜ் உள்ளிட்டோர் மாவட்ட வழங் கல் அதிகாரியிடம் அளித்துள்ள அம் மனுவில் கூறியிருப்பதாவது, நுகர் வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண் டகச் சாலை நடத்தும் நியாய விலை கடை பல ஆண்டுகளாக தனியார் கட்டி டத்தில் வாடகை கொடுத்து செயல் பட்டு கொண்டிருந்தது. இதனைய டுத்து, 64 ஆவது வார்டுக்குட்பட்ட மசால் லே அவுட், ஜெகநாதன் பிள்ளை வீதி, போலீஸ் கந்தசாமி வீதி பொதுமக்களா கிய நாங்கள், கோவை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பி.ஆர்.நடரா ஜன்னை நேரில் சந்தித்து சொந்த கட்டி டத்தில் நியாய விலை கடைகட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யுமாறு கோரிக்கை விடுத்தோம். இதனை ஏற்று, பங்கஜா மில் மெயின் ரோடு தண்ணீர் தொட்டி அருகில் உள்ள கோவை மாநகராட் சிக்கு சொந்தமான இடத்தை தேர்வு செய்யப்பட்டது. பின்னர், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடரா ஜன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 21 லட்சத்தை ஒதுக்கீடு செய் யப்பட்டது. தற்போது கட்டிடம் கட்டு மானப் பணி நடைபெற்று பணிகள் நிறைவடையவுள்ளது. எனவே நியாய விலைக் கடையை கோவை மாவட்ட நுகர் வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண் டக சாலை புதிய கட்டிடத்தில் செயல்படு வதற்கு ஏதுவாக உரிய உத்தரவை பிறப் பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள் ளது.