districts

img

ஊதிய உயர்வு வேண்டி கோரிக்கை

நாமக்கல், மார்ச் 4  ஊதிய உயர்வு வேண்டி கொசு புழு ஒழிப்பு பணியாளர்  நலச் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு  அளித்தனர்.  அந்த மனுவில், கொசுக்களினால் உண்டாகும் நோய்க ளான டெங்கு, சிக்கன் குனியா, டைபாய்டு, மலேரியா போன்ற  நோய்களிலிருந்து மக்களை பாதுகாக்கும் பணி செய்து வருகிறோம். கடந்த எட்டு ஆண்டுகளாக தினக் கூலியாக ரூபாய் 285 மட்டுமே வழங்கப்பட்டது. தற்சமயம் 1.4.2023  முதல் தினக்கூலியாக ரூபாய் 365 உயர்த்தி வழங்கப்ப டுகிறது. மேலும் நாங்கள் தினமும் 40 முதல் 60 வீடுகள் வரை சென்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை  வேலை செய்து வருகிறோம். இந்த ஊதியம் போக்குவரத்து  செலவுக்கு குடும்பத்தை வழி நடத்துவதற்கு இது போதுமா னதாக இல்லை. சுற்றுப்புற மாவட்டங்களில் வழங்கும் ஊதியம் போல் நாமக்கல் மாவட்டத்தில் ஊராட்சி மற்றும் பேரூராட்சி அலுவ லகங்கள் உட்பட பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக் கும் ஊதியம் உயர்த்தி வழங்க வேண்டும் என தெரிவித் துள்ளனர்.