districts

img

தில்லி பேரணி - சிபிஎம் ஆதரவு ஆர்ப்பாட்டம்

பள்ளிபாளையம், ஏப்.5-  தலைநகர் டில்லியில் தொழிலாளர், விவா சாயிகள், விவசாய தொழிலாளர்கள் பங்கேற் கும் பேரணி வெற்றியடையவும், கோரிக்கை கள் வெல்லவும், பள்ளிபாளையத்தில் மார்க் சிஸ்ட் கட்சியின் சார்பில் ஆதரவு ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.  நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு, பள்ளிபாளையம் சிபிஎம் ஒன் றிய செயலாளர் ஆர்.ரவி தலைமை ஏற்றார்.  இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்ட குழு உறுப்பினர் கே.மோகன், பள்ளி பாளையம் கட்சி ஒன்றிய குழு உறுப்பினர் எஸ்.முத்துக்குமார், வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் நவீன் மற்றும் சிஐடியு சங்கத்தை  சேர்ந்தவர்கள் திரளானோர் பங்கேற்றனர்.  முன்னதாக, போராடிப்பெற்ற உரிமை களை, கார்பரேட்டுகளின் நலனுக்காக பறிக் கும், மக்கள் விரோத ஒன்றிய பாஜக அரசை அகற்றுவோம், ஒன்றுபட்ட போராட்டத்தால் அனைத்தையும் வெல்வோம் என்கிற கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.