districts

img

லஞ்சம் கொடுத்தால்தான் பத்திரபதிவு: சிபிஎம் ஆவேசம்

சேலம், மார்ச் 8- இடைத்தரகர்கள் ஆதிக்கத்தில், லஞ் சம், ஊழல் புரையோடிப்போய் உள்ள சார்பதி வாளர் அலுவலகத்தை மீட்க வேண்டும் என் பதை வலியுறுத்தி சேலம் தாரமங்கலம் சார் பதிவாளர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பர பரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், தாரமங்கலம் சார்பதி வாளர் அலுவலகத்தில் நாள்தோறும் எண் ணற்ற பத்திரப்பதிவுகள் நடைபெறுவது வழக் கம். தமிழ்நாடு அரசு ஆன்லைன் மூலம் வெளிப் படையாக பத்திரப்பதிவு செய்ய வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டாலும் இடைத்தர கர்கள் கொண்டு தான் பத்திரப்பதிவு செய்யப் படுகிறது. இவ்வலுவலகத்தில், நாள்தோறும் லட்ச கணக்கில் முறைகேடுகள் நடைபெறுவ தாகவும், லஞ்சம், ஊழல் புரையோடியிருப்ப தாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சார் பதிவாளர் அலுவலகத்தில் நடை பெறும் முறைகேடுகளை கண்டித்து மார்க் சிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. செக்கு மேடு கிளை செயலாளர் பச்சமுத்து தலைமை ஏற்றார். இதில், மாவட்ட செயலாளர் மேவை.சண்முகராஜா, கொங்க ணாபுரம் ஒன்றிய செயலாளர் எஸ்.முத்து சாமி, எடப்பாடி தாலுகா செயலாளர் மு.பெரி யண்ணன், ஓமலூர் தாலுகா செயலாளர் ஈஸ் வரன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். முன்னதாக, தாரமங்கலம் சார்பதிவா ளரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.  அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையி னர் விசாரணை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் முன் வைத்தனர்.