பொள்ளாச்சி, ஆக. 7. பாசன காலத்தில் பரம்பிக்கு ளம் ஆழியாறு திட்ட தொகுப்பு அணைகளுக்கு அதிக நீர்வரத்து மற்றும் நீர் இருப்பு இருக்கும் பட் சத்தில், கூடுதலாக ஒரு சுற்று தண் ணீர் வழங்கலாம் என நீர்த்தேக்கத் திட்டக் குழுவின் தலைவர் மற்றும் குழு உறுப்பினர்களின் கலந்தாய்வு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. திருமூர்த்தி நீர்த்தேக்கத் திட்டக் குழு மற்றும் பரம்பிக்குளம் ஆழி யாறு பாசனத் திட்டத்தில் திரு மூர்த்தி நீர்த்தேக்கத் திட்டக்குழு வின் கூட்டம் செவ்வாயன்று பொள் ளாச்சி பி.ஏ.பி. கண்காணிப்புப் பொறியாளர் அலுவலகத்தில் நடை பெற்றது. இகூட்டத்தில், பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட தொகுப்பு அணை களில் உள்ள நீர் இருப்பு மற்றும் எதிர்பார்ப்பு நீர்வரத்து ஆகியவை கள் தென்மேற்கு பருவமழையின் காரணமாக திருமூர்த்தி அணை யினை தவிர மற்ற அணைகள் முழுக் கொள்ளளவு எட்டியுள்ளது. இந் நிலையில் நீர் உள்ளதை கருத்தில் கொண்டு எதிர்வரும் ஆக. 19 முதல் இரண்டாம் மண்டலப் பாச னத்திற்கு 120 நாட்களில் உரிய இடைவெளிவிட்டு நான்கு சுற்றுக் கள் தண்ணீர் வழங்கலாம். பாசன காலத்தில் பரம்பிக்குளம் ஆழி யாறு திட்ட தொகுப்பு அணைக ளுக்கு அதிக நீர்வரத்து மற்றும் நீர் இருப்பு இருக்கும் பட்சத்தில் கூடுத லாக ஒரு சுற்று தண்ணீர் வழங்க லாம். அதேபோன்று எதிர்வரும் மூன்றாம் மண்டலப் பாசனத்திற் கும் மேற்குறிப்பிட்டது போல் 4.1 சுற்றுகள் வழங்க திட்டக்குழு தலை வர் மற்றும் உறுப்பினர்களால் இக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இக்கூட்டத்திற்கு, திட்டக்குழு தலைவர் மெடிக்கல் பரமசிவம் தலைமை வகித்தார். தலைமைப் பொறியாளர், சு.முருகேசன் முன் னிலை வகித்தார். திட்டக்குழு உறுப் பினர்கள் ப.அருண், சி.நித்தியானந் தம், க.நல்லதம்பி. கோ.குருசாமி, ப.ஈஸ்வரன், மு.தெய்வசிகாமணி, மு.ஈஸ்வர மூர்த்தி, ர.பாலசுப்பிர மணியன் மற்றும் செயற்பொறியா ளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.