districts

img

திருப்பூரில் டிச. 30 முதல் ஜன. 2 வரை 17 ஆவது கட்டிட கட்டுமான பொருட்கள் கண்காட்சி

திருப்பூர், டிச. 24 - திருப்பூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் சார்பில் 17ஆவது கட் டட கட்டுமான பொருட்கள் கண்காட்சி,  டிசம்பர் 30ஆம் தேதி முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடை பெற உள்ளது. திருப்பூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் சங்க அலுவலக கட்டி டத்தில் சனியன்று சங்கத்தின் தலைவர்  சௌ.ஸ்டாலின் பாரதி, கண்காட்சித் தலைவர் எம்.துரைசாமி ஆகி யோர் செய்தியாளர்களிடம் கூறியதா வது:  திருப்பூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் ஆண்டுதோறும் நடத்தி  வரும் கட்டிட கட்டுமான பொருட்கள் கண்காட்சி, 17ஆவது ஆண்டாக, வரும்  டிசம்பர் 30ஆம் தேதி தாராபுரம் சாலை  வித்யா கார்த்தி திருமண மண்டபத்தில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட வளாகத் தில் நடைபெறுகிறது.

இதில் மொத்தம்  200 அரங்குகள் அமைக்கப்படுகின்றன. இக்கண்காட்சியில் தமிழகம் மற்றும்  இந்தியாவில் உள்ள கட்டிட கட்டுமான  பொருட்கள் தயாரிப்பிலும், விற்பனை யிலும் சிறந்து விளங்கும் 200 நிறுவனங் கள் பங்கு கொள்ள இருக்கின்றன. இதில் கட்டிடங்களுக்கு தேவையான, குறைந்த செலவு கொண்ட, புதிய வகைப் பொருட்கள் ஏராளமாக இடம் பெற உள்ளன. சுற்றுச்சூழலுக்கு தீங்கு  விளைவிக்காத செங்கல், கம்பி, சிமெண்ட், ரெடிமேடு கான்கிரீட், மரம் மற்றும் மரம் சார்ந்த பொருட்கள் டைல்ஸ், கிரானைட், மார்பில்ஸ், எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் மெட்டீ ரியல்ஸ், சிசிடிவி கேமரா, ஆட்டோமே சன், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வகை ஃபே வர் பிளாக், சோலார் லாக்கர், பலவித  கண்ணாடி வகைகள், புதிய வகை வர் ணப் பூச்சுகள், குளியலறை பிட்டிங்கு கள் உட்பட ஏராளமான பொருட்கள் இடம் பெற உள்ளன.  தினமும் காலை 10 மணி முதல் இரவு  8 மணி வரை நடைபெறும் இக்கண்காட் சியில் பொதுமக்கள் இலவசமாக பார் வையிடலாம். மாநில செய்தித் துறை  அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கண் காட்சி அரங்கை திறந்து வைக்கிறார். கே.சுப்பராயன் எம்.பி.,  கே.செல்வராஜ் எம்.எல்.ஏ, மாநகராட்சி  மேயர் என். தினேஷ்குமார்,

துணை  மேயர் ஆர். பாலசுப்பிரமணியம் உள் ளிட்டோர் துவக்க விழா நிகழ்ச்சியில் பங் கேற்க உள்ளனர். தினமும் மாலை 6  மணிக்கு கலை நிகழ்ச்சிகளும் நடை பெறும். கட்டுமான பொருட்கள் விற்பனை  நிறுவனங்களுக்கு சிறந்த வர்த்தகத்திற் கான வாய்ப்பை ஏற்படுத்தித் தருவது டன், கண்காட்சியை பார்வையிடும் பார் வையாளர்கள், ஒரே இடத்தில் தங்கள் கட்டுமானங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் விசா ரித்து வாங்கிக் கொள்ள முடியும் என்ற  வாய்ப்பை இந்த கண்காட்சி ஏற்படுத்தித்  தருகிறது. கடந்தாண்டு கண்காட்சியில் ஏறத் தாழ 250 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தக விசாரணை நடைபெற்றது. தற் போது திருப்பூர் தொழில் நிலைமை நன் றாக இல்லாவிட்டாலும், இந்த ஆண் டும் வர்த்தக விசாரணை அதிகரிக்கா விட்டாலும் கூட கடந்த ஆண்டை போல்  ரூபாய் 250 கோடி அளவிற்கு விசாரணை  நடைபெறும் என்று எதிர்பார்க்கிறோம். அதேசமயம் கடந்த முறை கொரோனா கட்டுப்பாடு இருந்தது. இம்முறை அந்த  பொது கட்டுப்பாடு இல்லாத நிலையில்  பார்வையாளர்கள் வருகை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இந்த சந்திப்பின்போது, அசோசியே சன் செயலாளர் கே.ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர் சி.பழனிச்சாமி மற்றும் கண்காட்சி நிகழ்வின் செய லாளர் ஆர்.பிரகாஷ், பொருளாளர் என். பாரதிராஜா, ஒருங்கிணைப்பாளர் எஸ். ஜெயராமன், துணைச் செயலாளர் எஸ். ராஜசேகரன், துணைப் பொருளாளர் டி. மகேஷ்குமார், தகவல் தொடர்பாளர் எஸ்.நாகராஜ், மலர் குழு தலைவர் எஸ். சம்பத்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.