சேலம், ஜூன் 22- கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்திப் பாதிக்கப்பட்டு, சேலம் அரசு மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலை யில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் விற்கப்பட்ட விஷச்சாராயத்தை 100க்கும் மேற்பட்டோர் வாங்கி அருந்தியுள்ள னர். அதில் பலருக்கு வாந்தி, மயக்கம், கண் எரிச்சல், வயிற்று வலி ஏற்பட்டது. இதைய டுத்து பாதிக்கப்பட்டவர்களை உறவினர் கள் அருகில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்த்த னர். அவர்களில் 47 பேர் மேல் சிகிச்சைக் காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனைக்கு கொண்டு வரப்பட்டனர். இதில், கள்ளக்குறிச்சி, மாதவசேரி நாராயணசாமி (65), வாய்க்கால் மேடு ராமு (50), கருணா புரம் சுப்ரமணி (60) ஆகியோர் வியாழ னன்று இரவு உயிரிழந்தனர். கோட்டமேடு ஆனந்தன் (50), துர்க்கம் ரோடு ரவி (60), கருணாபுரம் விஜயன் (59), பி.ராஜேந்திரன் (55), சேஷ சமுத்திரம் எஸ்.ராஜேந்திரன், மற்றொரு ஆனந்தன் (55), கோட்டைமேடு மனோஜ்குமார் (33), கள்ளக்குறிச்சி மாரியம்மன் கோவில் தெரு ராஜேந்திரன் (65), கருணாபுரம் நாகபிள்ளை (39) ஆகிய 9 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். மேலும், வெள்ளியன்று அதிகாலை கோட்டைமேடு பாலு (50), மற்றொரு ராஜேந்திரன் (60), மாதவன் சேரி வீரமுத்து (33) ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில், வெள்ளி யன்று இரவு மேலும் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் சேலம் அரசு மருத்து வமனையில் உயிரிழந்தவர்களின் எண் ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 30 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்ற னர். இதில் 10 பேரின் நிலை கவலைக் கிடமாக உள்ளது. இதனால் உறவினர்கள் கலக்கத்தில் உள்ளனர்.