தருமபுரி, ஜன.19- விசாரணைக்காக அழைத்து செல்லப் பட்ட மாற்றுத்திறனாளி உயிரிழந்த சம்பத் தில் தொடர்புடைய காவல் துறையினர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அணைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் நலசங்கத்தினர் புதனன்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், கருப் பூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பிரபா கரன், இவரது மனைவி அம்சலா ஆகி யோரை சேந்தமங்கலம் காவல் துறையினர் விசாரணைக்காக அழைத்து சென்று சித்திர வதை செய்துள்ளனர். இதன் காரணமாக பிரபாகரனின் பிறப்புறுப்பு உள்ளிட்டு உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டது. அதன்பின் பிரபாகரன் சேலம் அரசு மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலை யில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எனவே, பிரபாகரன் உயிரிழந்தது தொடர் பாக சம்பந்தபட்ட காவல் துறையினர் மீது கொலை மற்றும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். பிரபா கரன் குடும்பத்தார் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை திரும்பப் பெற வேண்டும். பிரபாகரன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப் பீடு மற்றும் அவரது குடும்பத்தில் ஒருவ ருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்துவகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான நலசங்கத்தினர் புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட் டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாற்றுத்திறனாளி கள் சங்க வட்ட தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். இதில், மாவட்ட பொறுப்பாளர் எம்.மாரிமுத்து, மாவட்ட செயலாளர் கே.ஜி.கரூரான், வட்ட செய லாளர் பி.காரல் மார்க்ஸ், வட்ட பொருளா ளர் பி.கிருஷ்ணன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் டி.எஸ்.ராமச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டனர். பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு.. தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் இளங்கோ தலைமை வகித்தார். இதில், மாநிலப் பொருளாளர் கே.ஆர்.சக் கரவர்த்தி, மாவட்ட பொறுப்பாளர் எம்.மாரி முத்து, மாவட்ட செயலாளர் கே.ஜி.கரூ ரான், வட்ட செயலாளர் கே.சுசிலா, வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் சி.சதீஷ் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கை களை வலியுறுத்தி ஆவேச முழக்கங்களை எழுப்பினர்.