districts

img

சிறையில் மாற்றுத்திறனாளி உயிரிழப்பு 2 உதவி ஆய்வாளர் உட்பட மூவர் சஸ்பெண்ட்

சேலம், ஜன.16- மாற்றுத்திறனாளி விசாரணைக் கைதி சிறையில் உயிரிழந்த விவகாரத்தில் 2 காவல் உதவி ஆய்வாளர் உட்பட மூன்று பேரை பணியிடை நீக்கம் செய்து சேலம் சரக டிஐஜி உத்தரவிட்டுள்ளார். சேலம் மாவட்டம், கருப்பூர் ஆதிதிரா விட தெருவை சேர்ந்தவர் பிரபாகரன். மாற் றுத் திறனாளியான இவரை நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் காவல் துறையி னர் கடந்த ஜன.11 ஆம் தேதியன்று கைது  செய்து மாவட்ட கிளை சிறையில் அடைத்த னர். இதன்பின், ஜன.12 ஆம் தேதியன்று  உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கூறி, அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச் சைக்காக சேர்த்தனர். ஆனால், அன்றைய தினம் இரவே பிரபாகரன் உயிரிழந்தார்.  இந்நிலையில், காவல் துறை தாக்கியதா லேயே பிரபாகரன் உயிரிழந்துள்ளார் எனக் கூறி, சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலியு றுத்தி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் செ. கார்மேகம் தலைமையில், போராட்டக்காரர் களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இறந்தவர் குடும்பத்திற்கு நிவா ரணம் மற்றும் அரசு வேலை ஆகியன அர சுக்கு பரிந்துரை செய்யப்படும் என ஆட்சி யர் உறுதியளித்தார்.  3 பேர் பணியிடை நீக்கம் இதைத்தொடர்ந்து, உயிரிழந்த பிரபாக ரனின் சகோதரர் சக்திவேல் சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள காவல் நிலை யத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து  சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்யப் பட்டு சனியன்று சேலம் முதலாவது நீதித் துறை நடுவர் கலைவாணி அரசு மருத்துவ மனைக்கு சென்று விசாரணை நடத்தினார். இதைத்தொடர்ந்து பிரேத பரிசோதனை நடைபெற்றது. இதனிடையே ஞாயிறன்று அதிகாலையில் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரைப்படி, திருச் செங்கோடு தாலுகா முதல்நிலைக் காவ லர் குழந்தைவேல், புதுச்சத்திரம் உதவி ஆய்வாளர் பூங்கொடி, சேந்தமங்கலம் உதவி ஆய்வாளர் சந்திரன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதற் கான உத்தரவை சேலம்  சரக டிஐஜி பொறுப் பில் உள்ள சேலம் மாநகர காவல் ஆணையா ளர் நஜ்மல் ஹோடா வழங்கினார். மார்க்சிஸ்ட் கட்சி இரங்கல் இந்நிலையில், மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த பிரபாகரனின் உட லுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர் மேவை.சண் முகராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் ஆர்.வெங்கடபதி, பி.இராமமூர்த்தி, எம்.குணசேகரன், மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் எம்.கனக ராஜ் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.  மேலும், சிபிஎம் ஓமலூர் தாலுகா செய லாளர் ஈஸ்வரன், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.அமலா ராணி, ராஜன், செல்வம் உள்ளிட் டோரும் பிரபாகரன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதன்பின் பிரபாகரன் உடல்  சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் இருந்து அவரது சொந்த ஊரான கருப்பூர் பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது.