districts

img

மலைக்கிராம மகளிருக்கான விடியல் பயண சேவை துவக்கம்

சேலம், மார்ச் 14- ஏற்காடு மலைக்கிராம மகளிர் பயன்பெறும் வகையில், மகளிர் விடியல் பயணத்திட்ட பேருந்து சேவையினை சேலம் வடக்கு சட்ட மன்ற உறுப்பினர் ரா.ராஜேந்திரன் வியாழனன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். சேலம் மாவட்டம், ஏற்காடு  மலைக்கிராம மகளிர் பயன்பெறும்  வகையில், மகளிர் விடியல் பயணத்  திட்ட பேருந்து சேவையினை வியா ழனன்று சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ரா.ராஜேந்திரன் ஏற் காடு பேருந்து நிலையத்தில் கொடி யசைத்துத் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், மக ளிரின் முன்னேற்றத்திற்காக பல் வேறு திட்டங்களை அறிவித்துச் தமிழ்நாடு முதல்வர் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், சாதாரண அரசு நகரப் பேருந்துகளில் மகளிர் கட்டணமில் லாமல் பயணிக்கும் வகையில் விடி யல் பயணம் என்ற திட்டம் செயல் படுத்தப்பட்டது. மலைப்பகுதிக ளில் உள்ள பெண்கள் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் மலைப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்ற வகையில் தமிழ் நாடு முதல்வர் கடந்த மாதம் நடை பெற்ற நிதிநிலை அறிக்கையில், மகளிர் விடியல் பயணத் திட்ட பேருந்து சேவைகள் மலைப் பகுதி களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று  அறிவிக்கப்பட்டது. அதன்படி, சேலம் கோட்ட தமிழ்நாடு அரசு  போக்குவரத்துக் கழகம் சார்பில்  சேலம் மாவட்டத்தில் ஏற்காடு  மலைப்பகுதிகளில் விரிவாக்கம் செய்யப்பட்டு துவக்கி வைக்கப் பட்டுள்ளது. இதன்மூலம், ஏற்காடு மலைப்பகுதிகளில் வாழும் சுமார் 65 கிராமங்களைச் சேர்ந்த மகளிர் மற்றும் உயர் கல்வி பயிலும் மாணவிகள் பயன்பெறுவார்கள், என்றார். அதேபோன்று, கருமந்துறை மலைப்பகுதிகளில் வாழும் சுமார்  98 கிராமங்களைச் சேர்ந்த மகளிர்  மற்றும் உயர் கல்வி பயிலும் மாணவிகள் பயன்பெறும் வகை யில் மகளிர் விடியல் பயணத் திட்ட  பேருந்து சேவையினை ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் தா.பிரிய தர்ஷினி வியாழனன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை யின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அலர்மேல்மங்கை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் மண் டலப் பொது மேலாளர் கோபால கிருஷ்ணன், துணை மேலாளர்கள் சிவலிங்கம், மணி மற்றும் உள் ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதி கள் கலந்து கொண்டனர்.