திருப்பூர், ஆக.22- திருப்பூரில் மாநகராட் சிக்கு சொந்தமான இடத் தில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே உள்ள ஆக்கிரமிப்பு களை அகற்றி, அம்பேத்க ருக்கு முழு உருவ வெண்கல சிலை வைக்க வேண்டும் என தீண்டாமை ஒழிப்பு முன் னணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கூட்டம் மாவட்டத் தலை வர் ச.நந்தகோபால் தலைமையில் புதனன்று நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் தொடர் போராட்டத்தின் விளை வாக பெறப்பட்ட 3 சதவீத அருந்ததியர் உள் ஒதுக்கீடு செல்லும் என நீதிமன்றம் உத்தர விட்டுள்ளதை மனதார வரவேற்பதாகவும், அக்டோபர் 29 திண்டுக்கல்லில் நடைபெறும் சிறப்பு மாநாட்டில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி திருப்பூர் மாவட்டக்குழு சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பங் கேற்க வைப்பது எனவும், தலித் அருந்ததியர் அமைப்புகள் சார்பிலும் பலரை பங்கேற்க வைப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டுள் ளது. மேலும், உள் ஒதுக்கீடு குறித்து மக்க ளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த 100 மையங்களில் ஊர் கூட்டங்கள் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மையப்பகுதியில் மாநகராட்சி இடத்தில் தனியார் மூலம் அமைக்கப்பட் டுள்ள அம்பேத்கர் சிலை அருகே உள்ள ஆக் கிரமிப்புகளை அகற்றி, அம்பேத்கருக்கு முழு உருவ வெண்கல சிலை அமைக்க வேண்டும். உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டுள்ளது. இந்த கூட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் மாநில துணைப் பொதுச் செய லாளர் பி.சுகந்தி கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாவட்டச் செயலாளர் சி.கே.கனக ராஜ், சிஐடியு நிர்வாகிகள் ஜி.சம்பத், பி. பாலன், வாலிபர் சங்கம் மாவட்டச் செயலா ளர் செ.மணிகண்டன், ஆதித்தமிழர் ஜனநா யக பேரவை அ.சு பௌத்தன், ஆதித்தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் மணி, கவிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.