districts

img

அவசர சிகிச்சைக்கு செல்ல அனுமதி கோரி தர்ணா

சிறுமி சிகிச்சை பெற உதவிய வட்டாட்சியர்

தூத்துக்குடி, மே 5- கோவில்பட்டி வள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் - முத்து மாரி தம்பதி. சலவைத் தொழிலாளி யான ஆறுமுகத்தின் மகள் லட்சுமி பிரியா(12). இவர் புதுக்கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி யில் படித்து வருகிறார். லட்சுமிபிரியா  பிறந்து 5 மாதம் முதல் சிறுநீரகப் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதையடுத்து, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று மருந்து, மாத்தி ரைகளை சாப்பிட்டு வருகிறார். 

இவருக்கு மாதம் ஒருமுறை மதுரை க்குச் சென்று பரிசோதனை செய்வது வழக்கம் என கூறப்படுகிறது. இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதையடுத்து லட்சுமிபிரியாவை அவரது பெற்றோர் பரிசோதனைக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை.  ஆனால் கடந்த சில நாள்க ளாக, இப்பிரச்சனையால் லட்சுமி பிரியாவுக்கு பல்வேறு உபாதை கள் ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்காக மதுரை செல்ல அவரது பள்ளி ஆசிரியர் ஒருவரின் உதவியுடன் தமிழக அரசின் இ-பாஸ் மின்னஞ்சல் முகவரியில் சனிக்கிழமை விண்ணப்பித்துள்ளார். ஆனால் திங்கள்கிழமை வரை அனுமதி ஏதும் கிடைக்கப் பெறாமல் காத்தி ருப்பில் இருந்துள்ளது.

இதையடுத்து, மகளின் அவசர சிகிச்சைக்கு மதுரை செல்ல அனுமதி கேட்டு கோட்டாட்சியர் அலுவலகத்தி ற்கு சென்ற முத்துமாரி, லட்சுமி பிரியா மற்றும் அவரது உறவி னர்கள் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் திடீரென போராட்டத் தில் ஈடுபட்டனர். பின்னர் போராட்டக் குழுவினருடன் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் ரகுபதி பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து அறிந்த தாசில்தார்  மணிகண்டண் சிறுமி மதுரைக்கு சென்று அவசர சிகிச்சை பெறுவ தற்காக ஏற்பாடுகளை செய்து கொடுத்தது குறிப்பிடத்தக்கது.