மேட்டுப்பாளையம், நவ.10- காந்தையாற்றின் குறுக்கே கட் டப்பட்ட பாலம் நீரில் மூழ்கிய நிலை யில், ஆபத்தான பரிசல் பயணத்தை தவிர்க்க மோட்டார் படகு சேவை துவங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பா ளையம் அடுத்துள்ள சிறுமுகை பேரூராட்சிக்கு உட்பட்ட லிங்கா புரம் என்னும் கிராமத்தில் பவானி யாற்றில் இணையும் காட்டாறான காந்தையாறு ஓடுகிறது. ஆற்றின் வடக்கு பகுதி மறுகரையில் பழங் குடியின மக்கள் அதிகம் வசிக்கும் காந்தவயல், காந்தையூர், மொக்கை மேடு, உளியூர் என நான்கு மலை யடிவார கிராமங்கள் உள்ளன. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங் கள் வசிக்கும் இக்கிராமங்களை சேர்ந்த மக்கள் கல்வி, வேலை, மருத்துவம், விவசாய பொருட்கள் விற்பனை என அனைத்து தேவை களுக்கும் காந்தையாற்றை கடந்து லிங்காபுரத்தை அடைந்த பின்னரே நகர பகுதிக்கு செல்ல இயலும். காட்டாற்றை கடப்பதில் உள்ள ஆபத்து காரணமாக இவர்களின் போக்குவரத்து வசதிக்காக கடந்த 2008 ஆம் ஆண்டு பழங்குடியின மக்களின் நலத்திட்டத்தின் கீழ் ரூபாய் நான்கு கோடி செலவில் காந்தையாற்றின் குறுக்கே ஆற்றின் தரைமட்டத்திலிருந்து இணைப்பு சாலையோடு 20 அடி உயரத்தில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது.
ஆனால், பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் அமைந்துள்ள இவ்விடத்தில் அணையின் நீர்தேக்க உயரத்தை சரியாக கணக்கிடாமல் இப்பாலம் கட்டப்பட்டதால் சிக்கல் உருவாகியது. மழைக்காலங்களில் காட்டாறுகளில் நீர்வரத்து அதிக ரித்து அருகில் உள்ள பவானிசாகர் அணையின் நீர்மட்ட உயரம் 97 அடியை கடக்கின்றதோ அப்போ தெல்லாம் இந்த காதையாற்று பாலம் நீருக்கடியில் மூழ்கி விடும். அணை யின் நீர்வரத்தை பொருத்து மெல்ல மெல்ல மூழ்க துவங்கும் இப்பாலம் பின்னர் யார் கண்களுக்கும் தென் படாமல் ஒட்டுமொத்தமாக நீருக் கடியில் சென்று விடும். இதன் இணைப்பு சாலையும் முழ்கிவிடும். ஆண்டுக்கு சுமார் ஆறு மாதங் கள் வரை தண்ணீருக்குள் மூழ்கி கிடக்கும் இப்பாலத்தால் போக்கு வரத்து துண்டிக்கப்பட்டு இம்மலை கிராம மக்கள் அல்லல்பட்டு வரு கின்றனர்.
பள்ளி, கல்லூரிக்கு செல் லும் மாணவ, மாணவிகள், முதி யோர், பெண்கள், அவசர மருத்துவ தேவையுள்ள கர்ப்பிணிகள், நோயா ளிகள் என அனைவரும் உயிருக்கு உத்தரவாதமில்லாத முறையில் பரிசல்கள் மூலமே காட்டாற்றை கடந்து சென்று திரும்புகின்றனர். இந்நிலையில், தற்போது சிறுமுகை பேரூராட்சியின் வேண்டுகோளை ஏற்று மாவட்ட நிர்வாகம் சார்பில் பொது மக்கள் பாதுகாப்பாக பய ணிக்கும் வகையில் மோட்டார் படகு கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் மாணவ, மாணவிகள் மற்றும் வயது முதிர்ந்தோர் இலவசமாக பய ணிக்கலாம் என உள்ளூர் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோட்டார் படகு வருகையை முன்னிட்டு இப்பகுதி மக்களின் போக்குவரத்து சற்றே எளிதாகியுள் ளது என்றாலும் பழைய பாலத்தை அப்புறப்படுத்திவிட்டு சரியான உய ரத்தில் புதிய பாலம் கட்டுவதே இப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக அமையும் என்பதே இப்பகுதி கிராம மக்களின் கருத்தாக உள்ளது. இதுகுறித்து அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட போது, “புதிய பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், விரை வில் அதற்கான பணிகள் துவங் கும்” எனவும் தெரிவித்தனர்.