உதகை, ஜன.18- பைக்காரா அணைக்கு செல் லும் சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுதால், சம்பந்தபட்ட அதி காரிகள் உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ள னர். கூடலூர் சாலையில் பைக்காரா அணை உள்ளது. சில வருடங்க ளுக்கு முன்பு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், அந்த அணையில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய நடவடிக்கை எடுக்கப் பட்டது. அதன் பின்னர் பைக்காரா படகு இல்லமாக செயல்பட்டு வரு கிறது. தற்போது குளிர் சீசனை யொட்டி ஆயிரக்கணக்கான சுற் றுலா பயணிகள் பைக்காரா படகு இல்லத்துக்கு வந்து செல்கின்ற னர். உதகை - கூடலூர் சாலையில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வனப் பகுதி வழியாக பைக்காரா படகு இல்லத்துக்கு சாலை ஒன்று செல்கிறது. வனத்துறை சார்பில், ஜீப் மற்றும் கார்களுக்கு ரூ.15, இருசக்கர வாகனங்களுக்கு ரூ.5, வேன்களுக்கு ரூ.30 என நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனிடையே பைக்காரா படகு இல்லத்திற்கு செல்லும் சாலை கடந்த பல மாதங்களாக மிகவும் குண்டும், குழியுமாக காணப்படுகி றது. ஆங்காங்கே கற்கள் பெயர்ந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது. இதனால் அவ் வழியாக செல்லும் சுற்றுலா பயணி களின் வாகனங்கள் ஊர்ந்து செல் கிறது. சுற்றுலா பயணிகளை பதற வைக்கும் இந்த சாலையை சீர மைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதைத்தொடர்ந்து குண் டும், குழியுமாக இருந்த சில இடங் களில் மணல் கொட்டப்பட்டு சமன் படுத்தப்பட்டது.
காற்றில் மணல் பரப்பதாலும், மழையில் அடித்து செல்லப்படுவதாலும் தற்காலிக சீரமைப்பும் பயன் இல்லாமல் போய்விட்டது. இதுகுறித்து சுற்றுலா பயணி கள் கூறுகையில், பைக்காரா அணைக்கு செல்லும் சாலை பழுத டைந்து காணப்படுவதால் வாக னங்களின் டயர்களை பதம் பார்க் கும் நிலை உள்ளது. அப்படி வாக னங்களில் பழுது ஏற்பட்டால், அதனை சரிசெய்ய அங்கு எந்த விதமான வசதிகளும் இல்லை. இத னால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர். சம்பந்தப் பட்ட அதிகாரிகள் சாலையை முழு மையாக சீரமைக்காமல் குழிகளில் மணலை கொட்டி உள்ளனர். காற் றில் புழுதி பறப்பதால் எதிரே வரும் வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற் படும் வாய்ப்பு உள்ளது. சில சுற்றுலா பயணிகள் கூட லூர் சாலையில் வாகனங்களை நிறுத்தி விட்டு பைக்காரா படகு இல் லத்துக்கு நடந்தே செல்கின்றனர். இவ்வாறு சாலைகளில் வாகனங் கள் ஆங்காங்கே நிறுத்தப்படுவ தால் போக்குவரத்து பாதிப்பு ஏற் படுவதோடு, விபத்து ஏற்படும் அபா யமும் உள்ளது. எனவே, பைக் காரா படகு இல்லத்துக்கு செல்லும் பழுதடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவ டிக்கை எடுக்க வேண்டும், என கோரிக்கை விடுத்துள்ளனர்.