districts

img

அரசு இழப்பீடு வழங்க விவசாயிகள் எதிர்பார்ப்பு

திருப்பூர், டிச. 6 - உடுமலை அருகே அறுவடைக்குத் தயார்  நிலையில் இருந்த நெற்பயிர்கள் தொடர்  மழை காரணமாக வயலிலேயே சாய்ந்து  அழுகி வீணாகும் நிலைக்குச் சென்றுள்ளன.  இதனால்  இழப்பைச் சந்தித்து வேதனையில்  இருக்கும் விவசாயிகள் அரசு நிர்வாகம் உரிய  இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோருகின் றனர். உடுமலை அமராவதி அணை பழைய  ஆயக்கட்டு, கல்லாபுரம், ராமகுளம் கால் வாய் மூலம் சுமார் 3200 ஏக்கர் நிலங்கள்  பாசன வசதி பெற்று வருகின்றன. இப்பகுதி களில் கடந்த ஆகஸ்ட் மாதம் சம்பா நெல்  சாகுபடி செய்யப்பட்டது. தற்போது நெற்கதிர் கள் அறுவடைக்குத் தயாராக உள்ளன. இந்நி லையில், வடகிழக்கு பருவமழை தீவிரம டைந்துள்ளது. இப்பகுதிகளில் பெய்த தொடர் மழையால் முற்றிய நெற்கதிர்கள் வய லிலேயே சாய்ந்து விட்டன. அவை, வயலில்  தேங்கி நிற்கும் தண்ணீரிலும், சேற்றிலும் புதைந்து அழுகி வீணாகி உள்ளது.  மழையால் நெற்பயிர்கள் முழுமையாக சேதம் அடைந்துள்ளதால் பெரும் பொருளா தார இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாகவும் விவ சாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

மேலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் இப்பகுதியில் நேரடி ஆய்வு செய்து, பயிர் இழப்பீடு கணக் கெடுப்பு நடத்தி உரிய இழப்பீடு பெற்றுத் தர  வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது பற்றி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் மாவட்டத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூ தனன் கூறுகையில், திருப்பூர் மாவட்டத்தில் இது போன்ற பாதிப்புகள் தொடர் மழை காலங்களில் ஏற்பட்டு வருகின்றன. கடந்த  மழை பருவத்தில் விவசாயிகள் இந்த பகு தியில் காலிபிளவர் பயிர் சாகுபடி செய்திருந் தனர். அப்போதும் மழையில் அந்த பயிர்கள்  பாதிக்கப்பட்டு விவசாயிகளுக்கு இழப்பு ஏற் படுத்தியது. பீட்ரூட் சாகுபடி செய்தபோதும் இதேபோல் மழை காரணமாக பாதிப்பு ஏற்பட் டது. தற்போது நெற்பயிர்கள் பாதிக்கப்பட் டுள்ளன. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம், வேளாண்மைத் துறை உரிய கவனம் செலுத்த  வேண்டும். மழை காலங்களில் ஏற்படும் பாதிப்புகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். காப்பீடு செய்வதற்கும் ஏற்பாடு  செய்ய வேண்டும். விவசாயிகள் குறை தீர்க்  கூட்டத்தின் போதும், மழை காரணமாக பாதிக் கப்படும் பயிர்களுக்கு இழப்பீடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என  வலியுறுத்தி இருக்கிறோம். திருப்பூர் மாவட்ட  ஆட்சியர் இப்பிரச்சனையில்  தனி கவனம்  செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார் பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாக கூறி னார்.