districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் ஜமாபந்தி

ஈரோடு, மே 21- ஈரோடு மாவட்டத்தில் 1432-ம் பசலிக்கான வருவாய் தீர் வாயம் மூலம் அனைத்து வட்டங்களிலும் மே 25 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதியன்று வரை நடைபெறவுள்ளது. கொடுமுடி, மொடக்குறிச்சி, பவானி, ஈரோடு மற்றும் நம்பியூர் ஆகிய வட்டங்களில் மே 25 ஆம் தேதியன்று முதல்  மே 29 ஆம் தேதி வரையிலும், தாளவாடி வட்டத்தில் மே 25 ஆம் தேதியும் ஜமாபந்தி நடைபெறும். அந்தியூர் வட்டத்தில்  மே 25 முதல் மே 30 ஆம் தேதி வரையிலும், கோபிசெட்டி பாளையம், சத்தியமங்கலம் மற்றும் பெருந்துறை ஆகிய வட்டங்களில் மே 25 முதல் மே 31 ஆம் தேதி வரையிலும் (சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்கள் நீங்கலாக) அந்தந்த  வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற உள் ளது. எனவே பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அந்தந்த வருவாய் தீர்வாய அலுவலர்களிடம் சமர்ப்பித்து உரிய நிவாரணம் தேடிக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சி யர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

தூய்மை பணியாளரை தாக்கியவர் கைது

கோவை, மே 21- கோவை மாநகராட்சி தூய்மை பணியாளரை தாக்கிய வாலிபரை காவல் துறையினர் கைது செய்தனர். கோவை மாவட்டம், வெரைட்டிஹால் சாலை, சிஎம்சி கால னியை சேர்ந்தவர் முத்துக்குமார் (38). இவர் மாநகராட்சி யில் தற்காலிக தூய்மை பணியாளராக வேலை செய்து  வருகிறார். இந்நிலையில், அப்பகுதியில் கோவில் திரு விழா நடைபெற்றது. அப்போது அதேபகுதியைச் சேர்ந்த கோகுல கிருஷ்ணன் (23), என்பவர் பொதுமக்களிடம் குடி போதையில் தகராறு செய்துள்ளார். இதனை முத்துக்குமார் கண்டித்தார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திர மடைந்த கோகுலகிருஷ்ணன், தகாத வார்தைகளால் பேசி முத்துக்குமாரை தாக்கினார். இதுகுறித்து வெரைட்டிஹால் சாலை காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அப்புகா ரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சிஎம்சி காலனி யைச் சேர்ந்த கோகுலகிருஷ்ணனை கைது செய்தனர். இதன் பின் அவரை நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்த னர்.

வாகனம் மோதி மான் பலி

உதகை, மே 21- பந்தலூர் அருகே வாகனம் மோதி மான் ஒன்று பரிதாப மாக உயிரிழந்தது. நீலகிரி மாவட்டம், பந்தலூர் வனச்சரகத்தில் உள்ள தேவாலா - கூடலூர் செல்லும் நெடுஞ்சாலையில் கடமான் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைந் தது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறை யினர் மானின் உடலை சுற்றி ஆய்வு மேற்கொண்டனர். இதன் பின் முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் ராஜேஷ் குமார், மானை பிரேதப் பரிசோதனை செய்தார். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், இறந்தது ஒன்றரை வயது டைய பெண் மான் எனவும், சாலையைக் கடக்கும்போது வாக னம் மோதி உயிரிழந்ததாகவும் தெரிவித்தனர்.

பவானி சாலையில் விழுந்த மரம்: போக்குவரத்து பாதிப்பு

ஈரோடு, மே 21- சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் அந்தியூர் –  பவானி சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப் பட்டது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் கோடை மழை பெய்து வருகிறது. இதன் காரண மாக வனப்பகுதிகளில் உள்ள நீரோடைகளில் தண்ணீர்  தேங்கி நிற்கிறது. இந்நிலையில், சனியன்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது. சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சனியன்று இரவு 9 மணி முதல் 10 மணி வரை இடி மின்ன லுடன் பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து இரவு முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது. இதேபோல், அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளிலும் சனியன்று இரவு சூறா வளி காற்றுடன் மழை பெய்தது. சூறாவளி காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அந்தியூர் - பவானி சாலையில், முருகன் கிணறு அருகே சாலையோரம் இருந்த ஒரு மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டது. இதனையடுத்து அந்தியூர் காவல் உதவி ஆய்வாளர் கார்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மரங்களை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் அந்தியூர், தவிட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி காற்றின் காரணமாக மின்தடையும் ஏற்பட்டது. பர்கூர் மலைப்பகுதியில் ஆலங்கட்டி மழையும் பெய்தது. இதனால் மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர் மழையால் பயிர்கள் சேதம்

உடுமலை, மே 21- உடுமலையில் பெய்த தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மக்காச் சோள சோள பயிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள ஆண்டிய கவுண்டனூர் ஊராட்சிக்குட்பட்ட உரல்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழையின் காரணமாக சுமார்  10 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளம் மற் றும் சோளக்கதிர்கள் சேதமடைந்தன. இதுகுறித்து பாதிக் கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், இப்பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து சூறாவளி காற்றுடன், இரவு நேரத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனிடையே ஒரு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரத்துக்கு மேல் செலவு செய்து, பயிரிடப்பட்டி ருந்த சுமார் 10 ஏக்கருக்கு மேல் அறுவடைக்கு தயாராக இருந்த மக்காச்சோள பயிர்கள் அடியோடு சாய்ந்து சேதமாகின. இதனால் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட வேளாண் அதிகாரிகள் கள ஆய்வு மேற் கொண்டு, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

அந்நிய மரக்கன்றுகள் நட எதிர்ப்பு

உதகை, மே 21- கோத்தகிரி அருகே நீரோடையின் இருபுறமும் தண்ணீரை அதிகளவில் உறிஞ்சும் அந்நிய மரக்கன்றுகள் நடவு செய்வ தற்கு அப்பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பகுதியில் தேயிலை விவ சாயத்துக்கு அடுத்தபடியாக, மலைக்காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும், ஏற்றுமதி தரம் வாய்ந்த வெளிநாட்டு காய்கறிகளையும் விவசாயிகள் பயிரிட்டு வரு கின்றனர். கூக்கல்தொரை பகுதி விவசாயிகள் உயிலட்டி நீர் வீழ்ச்சியில் இருந்து வரும் தண்ணீர், எரிசிபெட்டா, வ.உ.சி. நகர், ஓடேன்துறை கிராம விவசாயிகள் ஓடேன் நீரோடை, காக்காசோலை பகுதி விவசாயிகள் அப்பகுதி நீரோடையை நம்பி உள்ளனர். இதேபோல் குருகுத்தி நீரோடையை நம்பி  குருகுத்தி, காவிலோரை, நெடுகுளா உள்ளிட்ட கிராமங் களை சேர்ந்த விவசாயிகள் பயிர் சாகுபடி செய்து வருகின்ற னர். இதற்கிடையே நீரோடைகள் கடந்த சில ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்தன. இதையடுத்து வேளாண் பொறி யியல் துறை சார்பில், நில அளவை செய்து, நீரோடை ஆக்கி ரமிப்புகள் அகற்றப்பட்டது. நீரோடையின் பக்கவாட்டில் தடுப்புச்சுவர்களும் கட்டப்பட்டன. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தூர்வாரப்பட்ட நீரோடையின் இருபுறமும் தண்ணீரை அதிகளவு உறிஞ்சக் கூடிய அந்நிய நாட்டு மரக்கன்றுகளை வேளாண் பொறியியல் துறையினர் நடவு செய்து வருகின்றனர். இதற்கு நெடுகுளா ஊராட்சி நிர்வாகமும், விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரி வித்ததுடன், பணியை தடுத்து நிறுத்தினர். ஆனால், தற்போது மீண்டும் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி நடந்து வரு கிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள் பெருமளவிலான போராட்டத்தில் ஈடுபட ஆயத்தமாகி வருவதாக கூறப்படு கிறது.

ஆடுகள் திருட்டு

கோவை, மே 21- கோவை, குனியமுத்தூர், அபிராமி நகரை சேர்ந்தவர் ராஜகுரு (37). இவர், தனது தோட்டத்தில் கொட்டகை அமைத்து கால்நடைகளை வளர்த்து வருகிறார். இந்நி லையில், கொட்டைகையில் இருந்த 5 ஆடுகளை காண வில்லை. சுமார் ரூ.30 ஆயி ரம் மதிப்பிலான ஆடுகளை அடையாளம் தெரியாத நபர் கள் திருடிசென்றது தெரிய வந்தது. இதுகுறித்து ராஜ குரு குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகாரளித் தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரித்து வருகின்றனர்.

சிறுவர் பூங்கா - அமைச்சர் திறந்து வைத்தார்

திருப்பூர், மே 21- திருப்பூர் மாவட்டம், முத்தூர் பேரூராட்சி, மகாலட்சுமி நகரில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்காவை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்  மு.பெ.சாமிநாதன் சனியன்று திறந்து வைத்தார்.  திருப்பூர் மாவட்டம், முத்தூர் பேரூராட்சி, மகாலட்சுமி நகரில் மூலதன மானிய திட்டத்தின் கீழ் ரூ.35 லட்சம் மதிப் பீட்டில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்காவை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார்.  மேலும், வெள்ளகோவில் நகராட்சியில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ், தீர்த்தாம்பாளையம் மற்றும்  தண்ணீர் பந்தலில் ரூ.36.44 கோடி மதிப்பீட்டில் நடை பெற்றுவரும் குடிநீர் திட்ட மேம்பாட்டு பணிகளை பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.  இந்நிகழ்ச்சியில், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் குமரேசன், வெள்ளகோவில் நகராட்சி ஆணையாளர் மோகன்குமார், வெள்ளகோவில் நகராட்சி பொறியாளர் மணி  மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.