districts

img

கனமழையால் ரூ.70 லட்சம் மதிப்பிலான வாழை சேதம்

ஈரோடு, ஆக.31- கோபி அருகே அறுவடைக்கு தயாராக இருந்த ரூ.70 லட்சம் மதிப் பிலான வாழை மரங்கள் கனம ழைக்கு சேதமடைந்தன. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள கோரக் காட்டூர், கடுக்காம்பாளையம், அய் யம்பாளையம், வெள்ளியங்காடு, குள்ளம்பாளையம், வெள்ளாங் கோயில் உள்ளிட்ட பல்வேறு கிரா மங்களில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் வாழை பயிரிட்டுள்ளனர். இங்கு  செவ்வாழை, மொந்தன், நேந்திரன், கதளி, ரஸ்தாளி உள்ளிட்ட பல்வேறு வகையான வாழைகளை பயிரிடப் பட்டு உள்ளது. ஒருவருட காலப்பயி ரான வாழை பெரும்பாலான இடங் களில் அறுவடைக்கு தயாராக இருந் தது. இந்நிலையில், புதனன்று இரவு கடுக்காம்பாளையம், அய்யம்பா ளையம், கோரக்காட்டூர், வெள்ளி யங்காடு, வெள்ளாங்கோயில் உள் ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பலத்த சூறாவளி காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. இதில் 10 ஆயிரத் திற்கு மேற்பட்ட அறுவடைக்கு தயா ராக இருந்த சுமார் ரூ.70 லட்சம் மதிப் புள்ள மொந்தன், கதளி, செவ்வாழை  ரக வாழைகள் முறிந்து விழுந்து முழுமையாக சேதமடைந்தன. ஒரு ஏக்கரில் பயிரிடப்பட்டி ருந்த ஆயிரம் வாழைகளில் 400  முதல் 500 வாழை மரங்கள் முறிந்து  விழுந்தன. காற்றுக்கு சேதமடையா மல் இருக்க வாழைமரங்கள் ஒன்று டன் ஒன்று கயிறு மூலம் கட்டப்பட்டி ருந்த நிலையில், பாதி வாழை மரங் கள் முறிந்து விழுந்தாலும், கயிறு களால் கட்டப்பட்டு உள்ளதால் மற்ற வாழைமரங்களும் முறிந்து விழுந்து வருகிறது. ஒரு வாழைக்கு சுமார் 150 முதல் 200 ரூபாய் வரை செலவு  செய்து ஒரு வருடம் வரை வளர்க் கப்பட்டு, அறுவடைக்கு சில நாட் களே உள்ள நிலையில் முறிந்து விழுந்து சேதமடைந்துள்ளது. இப் பகுதிகளில் மட்டும் சுமார் ரூ.70 லட் சம் அளவிற்கு சேதமடைந்துள் ளது. அதே நேரத்தில் முறிந்து விழுந் துள்ள வாழை மரங்களை வெட்டி அப்புறப்படுத்த ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவாகும் என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்து உள்ளனர். பயிர் காப்பீடுக்கு என குறிப் பிட்ட தொகையை ஆண்டுதோறும் காப்பீடு நிறுவனங்களுக்கு விவசா யிகள் செலுத்தி வந்தாலும், இது வரை காப்பீடு நிறுவனங்கள் இழப் பீடு வழங்கியதில்லை. இதனால் பயிர் காப்பீடு செய்தும் பயனில் லாத நிலையே உள்ளது. இதனால் வாழைக்கு காப்பீடு செய்துள்ள விவ சாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், கிடைக்கும் இழப் பீட்டு தொகையை வைத்து முறிந்து விழுந்த வாழையை அப்புறப்ப டுத்த பயன்படும் என்றும் விவசா யிகள் வேதனையுடன் தெரிவித் துள்ளனர்.