கோவை, அக்.20- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் கோவை மின்னரங்க இடைக்குழுச் செயலாளராக டி. மணிகண்டன் தேர்வு செய்யப் பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் கோவை மின்னரங்க இடைக்குழு 6 ஆவது மாநாடு காந்திபுரம் அருகிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத் தில், தோழர் வி.பாலகிருஷ்ணன் நினைவரங் கில் ஞாயிறன்று நடைபெற்றது. ஏ.செல்வ ராஜ் செங்கொடியை ஏற்றி வைத்தார். வி. மதுசூதனன் பி.விவேகானந்தன் ஆகியோர் தலைமை வகித்தனர். எம்.மணி கண்டன் வரவேற்றார். மின்ன ரங்க உபகுழு மாநில கன்வீனர் எஸ்.ராஜேந்திரன் துவக்கவுரை யாற்றினார். இடைக்கமிட்டிச் செயலாளர் டி.மணிகண்டன் அறிக்கையை முன்வைத்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன் வாழ்த்திப் பேசி னார். இதைத்தொடர்ந்து கட்சி யின் மின்னரங்க இடைக்கமிட்டிச் செயலா ளராக டி.மணிகண்டன் மற்றும் 9 இடைக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.அஜய் குமார் நிறைவுரையாற்றினார். இறுதியில், பி. காளிமுத்து நன்றி கூறினார்.