கோவை, ஜூன் 23- அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக உமா கார்க்கியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு கோவை வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹரீஷ், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் மனு அளித்திருந்தார். அந்த மனுவில், கோவை, சிங்காநல்லூரை சேர்ந்த பாஜக உறுப்பினர் உமா கார்த்திகேயன் என்பவர் உமா கார்க்கி என்ற பெயரில் டுவிட்டர் உட்பட பல்வேறு சமூக வலைதள பக்கத்தில் திமுகவினர் குறித்து அவதூறான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். குறிப் பாக இவர் காதலர் தினம், அன்னையர் தினம், தந்தையர் தினம் போன்ற தினங்களில் பெரியார் மற்றும் மணியம்மை குறித்து தவறாக சித்தரித்து மீம்ஸ் பதிவிட்டுள்ளார். மேலும், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக அமைச்சர்கள் குறித்தும் அவதூறு பரப்பும் வகையில் கருத் துக்களை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். சமீபத்தில் இந்தியாவில் இந்துக்களுக்கு மட்டுமே ஓட்டுரிமை அளிக்க வேண்டும் என்ற சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டுள்ளார். இது ஜனநாயக உரிமையை பறிக்கும் செயலாகும். எனவே திமுக தலைவர், பெரியார் உள்ளிட்டவர்கள் குறித்து தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பதிவு செய்து வரும் உமா கார்க்கி யின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந் தார். இதுகுறித்து,
கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், சைபர் கிரைம் போலீ சார் அவதூறு பரப்புதல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக கையாளுதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து உமா கார்க்கியை கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் உமா கார்க்கியை 2 நாள் விசாரணை மேற் கொள்ள சைபர் கிரைம் போலீசார் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து, கோவை ஜே.எம் எண் 4 நீதிமன்றம் மனு மீது விசாரணை நடத்தப்பட்டது. நீதிபதி 4 மணி நேரம் விசாரணை நடத்த அனுமதி வழங்கினார். வியாழனன்று மாலை விசா ரணை முடிந்து உமா கார்க்கியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி னர். குறைந்த நேர அவகாசத்தால் முழுமையாக விசாரிக்க முடியவில்லை. மேலும் ஒரு நாள் விசாரணை நடத்த அனுமதி வேண்டும் என போலீசார் கேட்டனர். நீதிமன்றம், ஒரு நாள் விசாரணை நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து உமா கார்க்கியிடம், போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர். உமா கார்க்கியின் பதிவுகள், அவ ரின் பின்னணியில் உள்ள அமைப்பு, சர்ச்சை கருத்துக்கள் விவ காரம் தொடர்பாக போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலை யில், இவரின் காவல் முடிந்து, சிறையில் அடைக்கப்பட்டார். அவரது பிணை மனு 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.