districts

img

சிறந்த காவல் நிலையமாக கூடலூர் தேர்வு

உதகை, ஏப்.7- சுகாதாரம் மற்றும் பதிவேடுகள் பராமரிப்பில் சிறந்த காவல் நிலையமாக கூடலூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.  கோவை மேற்கு மண்டல காவல் துறை துணை தலைவர்  முத்துசாமி, கூடலூர் காவல் நிலையத்துக்கு வருகை புரிந்து  வழக்குகள் குறித்த பதிவேடுகளை ஆய்வு செய்தார். மேலும், வளாகத்துக்குள் மரக்கன்றுகளை நடவு செய்தார்.  இதன்பின்னர் போக்சோ வழக்குகளை திறம்பட கையாண்டு  குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்று கொடுத்த மகளிர்காவல் ஆய்வாளர் சுசீலா, சரோஜா, ராணி  ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ரொக்க தொகையை வழங்கி பாராட்டினார். இதைத்தொடர்ந்து  போலீசாரின் குறைகளை கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து அவர் பேசுகையில், நீலகிரி மாவட் டத்தில் குற்ற வழக்கு பதிவேடுகள் பராமரிப்பதில் கூடலூர் காவல் நிலையம் சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆகவே, இக்காவல் நிலையத்திற்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதேபோல், கோவை மண்ட லத்துக்கு உட்பட்ட நீலகிரியில் போக்சோ வழக்குகள் குறை வாக உள்ளது. மேலும், மாநில எல்லைகளில் அனைத்துத்  துறைகளை ஒருங்கிணைத்த சோதனைச் சாவடிகள்  அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக, வாளையாரில் ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி அமைக்க  இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரி வித்தார்.