கோவை, மார்ச் 25- ஆழியாறு அணையில் முதலை காணப்பட்ட நிலை யில், சுற்றுலா பயணிக ளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி - வால்பாறை சாலை யில் 120 அடி உயரம் கொண்ட ஆழியாறு அணை உள்ளது. தற் போது மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து விட்டது. இதனால் அணையில் உள்ள பாறைகள், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பாலங்கள் வெளியே தெரிகின்றன. நீர்மட்டம் குறைந்து விட்டதால் சித்தாறு, கவிய ருவி ஆகியவை சேரும் அணைப்பகுதியில் முதலை நடமாட் டம் உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை யினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பொதுப்பணி மற்றும் வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ஆழியாறு அணைக்கு நீர்வரத்து இல்லாததால் நீர் மட்டம் குறைந்துள்ள நிலையில், அணையில் உள்ள முதலைகள் கரைப்பகுதிக்கு வருவது உறுதி செய்யப்பட்டு உள்ளது. எனவே ஆழியாறு அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் அணைக்குள் இறங்கு வது, வனப்பகுதியில் உள்ள அணை பகுதிக்குள் செல்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடக்கூடாது. ஆங்கிலேயர் கால பாலம் மற்றும் அறிவுத்திருக்கோவி லுக்கு எதிரே அணைக்குள் சுற்றுலா பயணிகள் இறங்குவதை தவிர்க்க வேண்டும். மேலும், தண்ணீர் குறைவாக இருப்ப தால் சேற்றில் சிக்கியும் உயிரிழப்பு ஏற்படக்கூடும். சுற்றுலா பயணிகள் அத்துமீறி செல்வதை கண்காணிக்க நடவடிக்கை டுக்கப்பட்டு உள்ளது. அணைக்குள் இறங்கும் சுற்றுலா பய ணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.