கோவை, அக்.24- புதிதாக திறக்கப்பட்ட நகர்ப்புற நல வாழ்வு மையம் ஐந்து மாதம் கூட நிறைவ டையாத நிலையில், அதன் தூண்கள் விரிசல் ஏற்பட்டுள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாநகராட்சி 52 ஆவது வார்டு பீளமேட்டில் கல்லூரி நகர் பகுதி உள்ளது. இங்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ் வுத்துறை சார்பில் ரூ25 லட்சம் மதிப்பீட்டில் நகர்ப்புற நல வாழ்வு மைய கட்டடம் கட்டப் பட்டது. இதனை, கடந்த ஜூன் மாதம் 6ஆம் தேதி முதலமைச்சரால் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த மையம் தினசரி காலை மாலை இரு முறை மட்டுமே செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் திறக் கப்பட்ட இந்த மையத்தின் முன்புற தூணில் பெரியளவு விரிசல் ஏற்பட்டுள்ளது. இது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகை யில், இதற்கு முன்பே அந்த தூணில் விரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து தற்காலிகமாக ஒட்டுப்போடும் பணிகள் செய்யப்பட்டது. தற்போது மீண்டும் விரிசல் ஏற்பட்டுள்ளது. முன்புறத் தூணில் இந்த விரிசல் ஏற்பட் டுள்ளதால், மருத்துவமனைக்கு வரும் மக்க ளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இம்மையத்தில் சுற்றுப்புற சுவரும் இடிந்து பாதுகாப்பற்ற நிலையில் புதர்மண்டி கிடக்கின்றன. இது போன்ற அன் றாடம் மக்கள் வந்து செல்லும் பொது கட்டிடங் கள் கட்டப்படும்போது, அதிகாரிகள் உரிய தலையீடு செய்து கண்காணிக்க வேண்டும். இல்லையென்றால் தரம் குறைவான கட்டுமா னங்கள் மக்களுக்கு ஆபத்தை விளைவிக் கும். உடனடியாக ஆட்சியர் உள்ளிட்ட அதி காரிகள் தலையீட்டு, கட்டடம் கட்டிய ஒப்பந்த தாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையில் கட்டடத்தின் விரிசல் களை சரி செய்திட வேண்டும் என்றனர்.