districts

நியூஸ் கிளிக் மீதான அடக்குமுறையை கண்டித்து திருப்பூரில் மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

திருப்பூர், அக். 17 – நியூஸ் கிளிக் இணையதள ஊட கத்தின் மீது அடக்குமுறையை ஏவி விட்டு, மூத்த பத்திரிகையாளர்கள் இரு வரை ஆள்தூக்கிச் (உபா) சட்டத்தில் கைது செய்திருக்கும் ஒன்றிய மோடி அரசைக் கண்டித்து திருப்பூரில் மார்க் சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது. மாநகராட்சி அலுவலகம் முன்பாக  செவ்வாயன்று நடைபெற்ற இந்த ஆர்ப் பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஆர்.குமார் தலைமை  வகித்தார். இதில் மோடி தலைமையி லான ஒன்றிய பாஜக அரசின் ஊழல்,  மதவெறி, கார்ப்பரேட் ஆதரவு கொள்கை களை அம்பலப்படுத்தி நேர்மையாக செயல்பட்டு வந்த நியூஸ் கிளிக் இணை யதள ஊடகத்திற்கு சீல் வைத்ததுடன், அதன் முதன்மை ஆசிரியர் பிரபீர் உள் ளிட்ட இருவரை தில்லி காவல் துறை  உபா சட்டத்தில் கைது செய்து சிறையில்  அடைத்துள்ளது. மேலும் இந்த ஊட கத்துடன் தொடர்புடைய பிரபல அறிஞர் கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட ஊட கத்துறையினர் 50க்கும் மேற்பட்டோர் வீடுகளில் பரிசோதனை என்ற பெயரில் அராஜகமான முறையில் அவர்களது மடிக்கணினி, செல்போன்களை பறித்துச் சென்றுள்ளனர். கருத்து சுதந் திரத்தைப் பறிக்கும், ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் மோடி  அரசின் அராஜகத்தைக் கண்டித்து கோபாவேச முழக்கங்கள் எழுப்பப் பட்டன. மோடி அரசின் இந்த ஜனநாயக விரோத அராஜக செயலைக் கண்டித்து திருப்பூர் மாவட்ட செய்தியாளர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பி னர், தீக்கதிர் செய்தியாளர் வே.தூய வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக் கண்ணன் ஆகியோர் உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந் திரளானோர் கலந்து கொண்டனர்.