districts

img

சிபிஎம் போராட்டம் வெற்றி: புதிய சாலைக்கு நிதி ஒதுக்கீடு

நாமக்கல், ஜூலை 20- எலச்சிபாளையம் அருகே குண் டும், குழியுமான சாலையை சீர மைக்க வேண்டும் என்கிற கோரிக் கையை வலியுறுத்தி மார்க்சிஸ்ட்  கட்சி தொடர் போராட்டம் நடத்தி வந்த  நிலையில், போராட்டத்தின் எதிரொ லியாக புதிய சாலை அமைக்க ஒரு  கோடியே 14 லட்சம் ரூபாய் நிதி ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், எலச்சிபா ளையம் அருகே அகரம் கிராமம், மோர் பாளையம் பிரிவு ரோடு வேலங் காடு அத்தி மரப்பட்டி போகும் வழி யில், சுமார் 3 கிலோமீட்டர் சாலை குண்டும், குழியமாக உள்ளது. இந்த சாலைகளை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால், எந்தவித நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகத் தின் சார்பில் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் இந்த பிரச்ச னையை கையில் எடுத்து பிப்ரவரி 6 ஆம் தேதி நடை பயணத்தை மேற் கொண்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு நேரில் வந்த வட்டார  வளர்ச்சி அலுவலர் லோகமணிகண் டன் பேச்சுவார்த்தை நடத்தினார். உட னடியாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக பொதுமக்கள்  முன்னிலையில் உறுதியளித்தார். இந்நிலையில், சுமார் 3 கிலோ  மீட்டர் தொலைவிற்கு ஒரு கோடி 14  லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து  தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள் ளது. ஐந்து வருடங்களாக எங்கள்  கோரிக்கை அரசின் கவனத்திற்கு எட்டாமல் இருந்த நிலையில், மார்க் சிஸ்ட் கட்சியின் போராட்டத்தின் விளைவாக எங்கள் பகுதிக்கு புதிய  தார்ச்சாலை அமைக்க அரசு நிதி ஒதுக் கியிருக்கிறது. இப்பிரச்சனையை கையில் எடுத்து போராடிய மார்க் சிஸ்ட் கட்சிக்கும், நிதி ஒதுக்கீடு செய்த தமிழக அரசுக்கும் அப்பகுதி பொது மக்கள் நன்றி தெரிவித்தனர்.