அவிநாசி,செப்.5- மழைக்காலங்களில் அண்ணா நக ரில் இருந்து வரும் சாக்கடை கால்வா யில் அடைப்பு ஏற்பட்டு, சாக்கடை நீர் பொதுமக்களின் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதன் மீது உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புத னன்று நகராட்சி அலுவலக அதிகாரியி டம் மனு அளித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருமுருகன்பூண்டி நகராட்சி கிளைகள் சார்பில் புதனன்று நகராட்சி அலுவலக அதிகாரியிடம் அளிக்கப்பட்ட மனு வில் கூறியிருப்பதாவது, திருமுருகன் பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட திருப்பூர் - அவிநாசி சாலையில் அண்ணா நகரில் இருந்து பூண்டி பாலம் வரை உள்ள சாலையில் இரவு நேரங்களில் சோலார் மின் விளக்குகள் எரிவதில்லை, இதனை சீரமைத்து தர வேண்டும். அதேபோல் அப்புறப்படுத்தப்பட்டு உள்ள மின் விளக்குகளை உடனடி யாக அமைத்து தர வேண்டும். மாரி யம்மன் கோவிலில் இருந்து வடக்கு ராக்கியாபாளையம் சந்திப்பு சாலை வழியாக பாரதி நகர் வடக்கு பகுதி களுக்கு புதிதாக சாக்கடை கால்வாய் அமைத்து தர வேண்டும். ராசாத்தா கோவில் குளத்தில் சாக்கடை நீர் கலக் காமல் தடுத்து நிறுத்தி, குளத்தை பாது காக்க வேண்டும். இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் எதிரே சாக்கடை நீர் குளம் போல் தேங்கியுள்ளது. அதை உடனடியாக அப்புறப்படுத்த வேண் டும், மழைக்காலங்களில் அண்ணா நகரி லிருந்து வரும் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, மழை நீருடன் சாக் கடை நீர் கலந்து பொதுமக்களின் வீடுக ளுக்குள் புகுந்து விடுகிறது. இதனை சீர மைத்து தர வேண்டும். பூண்டி நல் லாற்று பகுதியில் ஆக்கிரமித்து கட்டப் பட்டு வரும் கட்டிடங்களை நீதிமன்ற உத் தரவின் படி உடனடியாக அப்புறப்ப டுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியம், காமராஜ், கிளைச் செயலாளர் ராஜ், ஈஸ்வரன், நகர்மன்ற உறுப்பினர் சுப்பிரமணியம் வாலிபர் சங்க ஒன்றியத் தலைவர் சந்தோஷ் குமார் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.