districts

img

ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை நிரப்பிடுக

திருப்பூர், மே 10 - தேவைக்கேற்ப ஊழியர்களின் பணியிடங்களை நிரப்பி, உடுமலை கிராமப்புற வழித்தடங்களில் நிறுத்தப்பட்டுள்ள பேருந்துகளை இயக்கிட வேண்டும் என மார்க் சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் உடுமலைபேட்டை ஒன்றியக் குழுச்செயலாளர் கி.கனகராஜ் விடுத்துள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது: அரசுப் போக்கு வரத்து துறை உடுமலைப்பேட்டை போக்குவரத்து கிளையிலிருந்து கிராமப்புறங்களுக்கு இயக்கப் படும் பேருந்துகளை முறையாக  இயக்கப்படாமல் உடுமலை பணிமனையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பொது மக்கள் பெரிதும் அலைகழிப் ்பிற்கு உள்ளாகின்றனர். இது வன்மையாக கண்டிக்கத் தக்கது.   ஓட்டுநர் இல்லை, நடத்துநர் இல்லை என்று சொல்லிக் கொண்டு  பேருந்துகளை எந்த அறிவிப்பும் இல்லாமல் வாரக்கணக்கில் நிறுத்தி வைப்பதும், பேருந்து எங்கே என கேள்வி எழுப்பினால் இரண்டு நாளைக்கு இயக்குவது, மீண்டும் நிறுத்தி வைப்பது என்பது  பேருந்துக்காக காத்திருக்கும் மாணவர்களை, பெண்களை, தொழிலாளர்களை, பொதுமக் களை ஏமாற்றும் நடவடிக்கை யாகும்.  உடுமலை, குடிமங்கலம் பகுதி களில் அந்தியூர்-நெகமம், மைவாடி -கணியூர், அரசூர், வீதம்பட்டி, பூள வாடி, மெட்ராத்தி, கல்லாபுரம், அமராவதி, வடபூதனம், குரல் குட்டை, ஆலாம்பாளையம், திரு மூர்த்திமலை, மடத்துக்குளம், குமர லிங்கம் உட்பட பல்வேறு வழித் தடங்களில் இயக்கப்படும் பேருந்து கள் நிறுத்தப்படுவது தொடர் கிறது. இதனால் பொதுமக்கள்  கடுமையாக பாதிக்கப்படுகின் றனர்.  எனவே, உடுமலை போக்கு வரத்துக் கிளைக்கு உட்பட்டு இயக்கப்படும் பேருந்துகளுக்கு ஓட்டுநர், நடத்துநர் பணியிடங் களை பூர்த்தி செய்து அனைத்து வழித்தடங்களிலும் பேருந்துகளை முறையாக இயக்க வேண்டும் என  தெரிவித்துள்ளார்.