districts

img

அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்க சிபிஎம் வலியுறுத்தல்

தருமபுரி, பிப்.17- வி.ஜெட்டிஅள்ளி கிராமத்தில் நீண்ட ஆண்டுகாலமாக உள்ள அனு பவ நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சி யரிடம் மனு அளித்தனர். அம்மனுவில் கூறியிருப்பதா வது, தருமபுரி வட்டம், இலக்கியம் பட்டி ஊராட்சிக்குட்பட்ட வி.ஜெட்டி அள்ளி, வெள்ளேகவுண்டன்பாளை யம் சர்வே எண்:578, 579 எண்ணில் உள்ள 10 ஏக்கர் நிலம் ஓர் ஐயர் குடும்பத்துக்கு சொந்தமானது. ஐயர் குடும்பத்துக்கு பலவகையில் சேவ கம் செய்ததால், அவருக்கு தெரிந்தே சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர் 18  குடும்பங்கள் தங்களது வீட்டை ஒட் டிய பகுதியில் மாடு, ஆடு அடைக்க கொட்டகை அமைத்துள்ளனர். அங்கு தீவின புல் வளர்த்தும் நீண்ட காலம் அனுபவித்து வந்துள்ளனர். கடந்த சுமார் ஒரு வருடத்துக்கு முன் எந்தவித முன்னறிப்பும் இல்லாமல் வருவாய்த்துறையினர், அனுபவ தாரர்களின் அனுபவ நிலத்திலிருந்த மரங்களை ஜேசிபி இயந்திரம் மூலம் பிடுங்கியும், பயிர்களை அழித்தும் வெளியேற்ற முற்பட்டனர். அதனை தடுத்து, பொதுமக்கள் அதிகாரி களை சந்தித்து மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து அதிகாரிகளின் பாராமுகம் காரணமாக உரிமையி யல் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத் துள்ளனர். எனவே, 18 குடும்பங்கள் சுமார் 60 ஆண்டுகாலம் அனுபவம் செய்துவரும் இடங்களுக்கு பட்டா  வழங்க வேண்டும் என வலியுறுத்தப் பட்டுள்ளது. முன்னதாக, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா ளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.மாரிமுத்து, ஒன்றியச்  செயலாளர் என்.கந்தசாமி மற்றும் பழனி, மணி ஆகியோர் தருமபுரி ஆட்சியர் கி.சாந்தியிடம் மனு அளித் தனர்.