districts

img

விவேகானந்த சேவாலயத்தில் குழந்தைகள் உயிரிழப்பு: காப்பக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்

திருப்பூர், அக். 6- ஆதரவற்ற காப்பக சிறுவர்கள் உயிரி ழந்த சம்பவத்தில் அரசு நிர்வாகம் பாரபட்ச மற்ற விசாரணை நடத்தி சட்டப்படி நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலா ளர் செ.முத்துக்கண்ணன் வியாழக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது:  திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டி நக ராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ விவே கானந்த சேவாலாயம் ஆதரவற்ற குழந்தை கள் காப்பகத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர் கள் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. மேலும், 12  பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  பெற்றோரால் கைவிடப்பட்டோர், நிராதர வான நிலையில் இருப்போர் குடும்பங்க ளைச் சேர்ந்த பிள்ளைகள் உயிரிழந்திருப்பது  ஆழ்ந்த வருத்தம் அளிப்பதாக உள்ளது. அந்த குழந்தைகள் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆழ்ந்த இரங்கலைத் தெரி வித்துக் கொள்கிறது. அதேசமயம், கெட்டுப் போன உணவை சாப்பிட்டதால் சிறுவர்க ளுக்கு காய்ச்சல், வயிற்றுப் போக்கு, மயக் கம் ஏற்பட்டு அதில் இருவர் காப்பகத்திலேயே இறந்து விட்டனர். நிலைமை கை மீறிப் போன நிலையில்தான் அங்கிருக்கும் சிறு வர்கள் மருத்துவமனைக்கு கொண்டு வரப் பட்டுள்ளனர்.  காப்பகத்தின் நிர்வாகி, காப்பாளர் இருவ ரும் அங்கு இல்லை.

சமையலர், காவலாளி மட்டுமே இருந்துள்ளனர். ஆதரவற்றோர் காப்பகத்தை நடத்துவோர் குழந்தைகளின் பாதுகாப்புக்கு பொறுப்புள்ளவர்கள் யாரே னும் ஒருவராவது அங்கு 24 மணி நேரமும் பணி யில் இருந்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட வர்கள் யாருமே இல்லாத சூழ்நிலையில், இந்த துயரச் சம்பவம் நடைபெற்றிருக்கிறது.  எனவே இதற்கு சம்பந்தப்பட்ட நிர்வா கத்தைப் பொறுப்பாக்கி, அவர்கள் மீது அரசு  சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும். மேலும் இந்த சம்பவம் நடைபெற்ற காப்ப கத்தில், செய்தி சேகரிக்கச் சென்றபோது, செய்தியாளர்களை அனுமதிக்க காவல்துறை மறுத்துள்ளது. அதேசமயம் பாஜக, இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காப்பகத்தைச் சூழ்ந்து நின்று  கொண்டு அங்கு வந்தவர்களை மிரட்டியுள்ள னர். அவர்களில் சிலர் காப்பகத்திற்குள் சென்று வந்துள்ளனர். ஆனால் அவர்களைக்  காவல்துறை தடுக்காமல் அனுமதித்துள் ளது. இது பாரபட்சமான அணுகுமுறையாக உள்ளது. எனவே நடந்த சம்பவத்தில் பாரபட்சமற்ற முறையிலும், எவ்வித அதிகார ஆதிக்கத் தலையீடுகளுக்கும் இடமளிக்காமலும், ஆதரவற்ற சிறுவர்கள் உயிரிழப்புக்கு உரிய உண்மைக் காரணத்தைக் கண்ட றிந்து, தொடர்புடையவர்கள் மீது சட்டப்படி  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட் டக்குழு சார்பில் கேட்டுக் கொள்வதாக மாவட் டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் கூறியி ருக்கிறார்.