சேலம், நவ.2- சேலத்தில் பட்டியலின மக்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தி, வீடு களை சூறையாடிய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது. சேலம் தாலுகா, பூசநாயக்கனூ ரில் பட்டியலின மக்கள் வீடுகளுக் குள் சென்ற 10க்கும் மேற்பட்ட இளை ஞர்கள், சிறுவர்கள் சாதி வெறியுடன் அவர்கள் மீது காட்டுமிராண்டித் தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனை தடுக்க முயன்ற அப்பகுதி மக்களும் தாக்குதலுக்கு உள்ளாகி னர். தாக்குதலுக்கு உள்ளானவர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவம னையில் சிகிச்சை பெற்று வருகின்ற னர். இந்த தகவலையறிந்த தீண் டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் ஆர்.குழந்தைவேலு, உத விச்செயலாளர் சண்முகம், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட் டச் செயலாளர் மேவை.சண்முக ராஜா, மாவட்டக்குழு உறுப்பினர் எம். கனகராஜ், வாலிபர் சங்க மேற்கு மாந கரத் தலைவர் கோபி ஆகியோர், சம் பவ இடத்திற்கு நேரில் சென்று பாதிக் கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், காவல்துறை அதி காரிகளை சந்தித்து குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண் டும் என வலியுறுத்தினர். தொடர்ந்து சம்பந்தப்பட்ட 12 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட வர்களில் ஏழு பேர் சேலம் மத்திய சிறைக்கும், ஐந்து பேர் சிறார்கள் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்ட னர். பாதிக்கப்பட்ட பட்டியலின மக்க ளுக்கு நீதி வழங்க வேண்டும். வீட்டில் அடித்து நொறுக்கப்பட்ட பொருட்க ளுக்கு தகுந்த நஷ்ட ஈடு வழங்க வேண் டும். தாக்குதலை தடுக்க முயன்று பாதிக்கப்பட்ட நபர்களுக்கும் தக்க சிகிச்சையும், உரிய பாதுகாப்பும் வழங்க வேண்டும். அப்பகுதியில் கணக்கில்லாமல் நடந்து வருகிற சந்துக்கடைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்கள் வலியுறுத்தினர்.