districts

img

எழுச்சியோடு தொடங்கியது சிபிஎம் திருப்பூர் மாவட்ட மாநாடு

அவிநாசி, டிச.1- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட மாநாடு, அவிநாசி யில் ஞாயிறன்று எழுச்சியுடன் துவங் கியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  திருப்பூர் மாவட்ட 24 ஆவது மாநாடு, அவிநாசியில் ஞாயிறன்று துவங்கியது. வேலம்பாளையத்திலிருந்து கொண்டு  வரப்பட்ட வி.பி.சுப்பிரமணியம் நினைவு கொடி மரத்தை கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் கே.காமராஜ் பெற்றுக் கொண்டார். திருப்பூர் தெற்கு நகரப் பகுதியில் இருந்து என்.ஆறுமுகம் நினைவு கொடியை மாவட்ட செயற் குழு உறுப்பினர் எம்.ராஜகோபால், தியாகி வெள்ளியம்பாளையம் ஈஸ் வரன், மடத்துக்குளம் உஸ்மான் நினைவு கொடிக்கயிற்றை மாவட்ட  செயற்குழு உறுப்பினர் எஸ்.சுப்பி ரமணியம் ஆகியோர் பெற்றுக்கொண் டனர். வடக்கு மாநகரத்தில் இருந்து வந்த ஆஷர் மில் தியாகி பழனிச்சாமி  நினைவு ஜோதி, சீராணம்பாளையம் பழனிச்சாமி, இடுவாய் கே.ரத்தினசாமி நினைவு ஜோதி, கேத்தம்பாளையம் ஆர்.பன்னீர்செல்வம் நினைவு ஜோதி ஆகியவற்றை கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஏ.ஷகீலா, பி.ஆர். கணேசன் ஆகியோர் பெற்றுக்கொண் டனர். மாவட்ட செயற்குழு உறுப் பினர் கே.உன்னிகிருஷ்ணன் செங் கொடியை ஏற்றி வைத்தார். மறைந்த தியாகிகள் ஸ்தூபிக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ரங்கராஜ் தலைமையில் பொது மாநாடு தேவாங் கர் திருமண மண்டபத்தில், தோழர் என்.சங்கரய்யா நினைவரங்கில், தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்டரா மன் நுழைவாயிலில் துவங்கியது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி. மூர்த்தி அஞ்சலி தீர்மானத்தை வாசித் தார். சிபிஎம் அவிநாசி ஒன்றியக் கவுன் சிலர் முத்துசாமி வரவேற்றார். கட்சி யின் மூத்த உறுப்பினர்கள், தீக்கதிர் விநியோகிப்பாளர்களுக்கு பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப் பட்டது. கட்சியின் மத்தியக்குழு உறுப் பினர் உ.வாசுகி மாநாட்டை துவக்கி  வைத்து உரையாற்றினார். அறிக் கையை மாவட்டச் செயலாளர் செ. முத்துக்கண்ணன் முன்வைத்தார். மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந் திரன் வாழ்த்திப் பேசினார். மாநில  செயற்குழு உறுப்பினர் ஜி.சுகுமாறன் நிறைவுரையாற்றினார். இதையடுத்து செம்படை பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து திங்களன்றும் மாநாடு நடைபெற உள்ளது.