districts

img

அந்தியூர் பேரூராட்சி மன்றக்கூட்டத்தில் சொத்து வரி உயர்விற்கு சிபிஎம் கடும் எதிர்ப்பு

ஈரோடு, ஏப்.12- அந்தியூர் பேரூராட்சி மன்றக்கூட் டத்தில் வரி உயர்வு தீர்மானத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பி னர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள் ளார்.  அந்தியூர் பேரூராட்சி மன்றத்தின் அவசரக் கூட்டம் திங்களன்று மாலை  நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேரூ ராட்சியின் சொத்துவரி, தொழில்வரி உள்ளிட்ட வரி உயர்வுகளுக்கான தீர் மானம் கொண்டுவரப்பட்டது. இத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 3 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் கீதாசேகர் பேசுகையில்,  “அந்தியூர் பேரூராட்சியின் முதல் மன் றக் கூட்டமே அவசரக் கூட்டமாக நடப் பதுடன், பொதுமக்கள் மீது சொத்து வரி, தொழில்வரி என்று வரிஉயர்வை சுமத்தும் கூட்டமாக நடப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்தார். மேலும், பேரூராட்சியின் வரி உயர்வு அந்தியூர் பேரூராட்சி பொதுமக்களை கடுமை யாக பாதிக்கும்.  இதேபோல், ஒன்றிய பாஜக அரசு வரிகளை சீரமைப்பு செய்தால் தான் உள்ளாட்சி மன்றங்களுக்கான நிலுவை தொகைகளை விடுவிக்க முடி யும் என்று தமிழக மக்கள் தலையில் வரிச்சுமையை சுமத்த முயற்சிப்பதை கடுமையாக எதிர்ப்பதுடன், அந்த கார ணத்தைக்கூறி தமிழக அரசு மக்கள் மீது வரிச்சுமையை சுமத்துவதை கைவிட வேண்டும். எனவே, இத்தீர் மானத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்ப்பதுடன், ஆத ரிக்க முடியாது என்று தனது எதிர்ப் பினை பதிவு செய்தார். மேலும், தனது 3 ஆவது வார்டில் மஜீத் வீதியில் தார் சாலை வடிகால் புதுப்பிப்பு, பட்டக்காரர் வீதி, மீனவர் மாரியம்மன் கோயில் வீதிகளில் பழு தான கான்கிரீட் தளங்களை புதுபித்து அமைத்தல், மேற்படி மூன்று வீதிகள் மற்றும் எம்.ஜி்.ஆர் வீதி ஆகிய நான்கு  வீதிகளில் உள்ள பொது குடிநீர் குழாய்களை கள ஆய்வு செய்து பழு தான டேப்களை மாற்றி புதிய டேப் களை அமைக்கவேண்டும், தாழ்வாக உள்ள பைப்புகளை உயர்த்த வேண் டும் என்கிற கோரிக்கை மனுவையும் பேரூராட்சி செயல் அலுவரிடம்  கீதா சேகர் வழங்கினார். மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் சார்பில் அந்தியூர் பேரூ ராட்சி மக்கள் மீதான வரி உயர்வினை எதிர்த்து இயக்கமும் நடைபெற உள்ளது.