districts

img

கழிப்பிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர சிபிஎம் கையெழுத்து இயக்கம்

திருப்பூர், ஜூலை 30 – ஊத்துக்குளி ஒன்றியம் மா.தொட்டிபாளையம் ஊராட் சிக்கு உட்பட்ட ஆதிதிராவிடர் காலனியில் உள்ள பொதுக்க ழிப்பிடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கையெழுத்து இயக்கம்  நடத்தியது. மா.தொட்டிபாளையம் ஆதிதிராவிடர் காலனியில் 2018 – 19  ஆம் நிதியாண்டில் கனிமம் மற்றும் சுரங்க நிதியில் இருந்து  மகளிர் சுகாதார வளாகம் அமைக்கப்பட்டது. ரூ.7 லட்சம் திட்டச் செலவில் கட்டப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகியும், இந்த கழிப்பிடம் பொது மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப் படவில்லை. எனவே பெண்கள் மற்றும் குழந்தைகள் உடல்  உபாதைகள் கழிப்பதற்கு மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்ற னர். எனவே பெண்கள், குழந்தைகள் பயன்படுத்தும் வகை யில் இந்த கழிப்பிடத்தை உடனடியாக தூய்மைப்படுத்தி திறப் பதற்கு நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டுள்ள னர். மா.தொட்டிபாளையம் கட்சி கிளைச் செயலாளர் க.பிரகாஷ் தலைமையில் கட்சியினர் ஞாயிறன்று நூற்றுக்கும்  மேற்பட்ட பொது மக்களிடம் கையெழுத்துப் பெற்று  கோரிக்கை மனுவை நடுப்பட்டி ஊராட்சிமன்றத் தலைவ ரிடம் திங்களன்று வழங்கினர்.