திருப்பூர், ஜூன் 9- காங்கயத்தில் திருப்பூர் சாலை பெட் ரோல் பங்க் அருகில் சாக்கடை கழிவுநீர் வெளியேறிச் செல்ல வழியின்றி தேங்கி நிற் கிறது. பல ஆண்டுகளாக நீடிக்கும் இப் பிரச்சனையில் நகராட்சி நிர்வாகம் சாக் கடை கால்வாய் அமைத்துத் தர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரி யுள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் கே.திருவேங் கடசாமி உள்பட அப்பகுதி பொது மக்கள் வியாழக்கிழமை காலை காங்கயம் நகராட்சி ஆணையர் வெங்கடேஸ்வரனிடம் மனு அளித்தனர். காங்கயம் நகராட்சி 1, 2, 3 ஆகிய மூன்று வார்டுகளுக்கு உட்பட்ட சௌடாம்பிகை நகர், வாய்க்கால் மேடு, சந்தியா நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஐநூறுக்கும் மேற் பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப் பகுதிகளில் உற்பத்தியாகும் கழிவுநீர் வெளி யேறிச் செல்ல வடிகால் வசதி இல்லாத நிலையில் திருப்பூர் சாலையில் எச்.பி., பெட்ரோல் பங்க் அருகில் தேங்கி நிற் கிறது.
இந்த இடத்தில் நகராட்சி வாக னத்தின் மோட்டார் மூலம் உறிஞ்சி கழிவுநீரை வெளியேற்றிக் கொண்டு செல்கின்றனர். பல ஆண்டு காலமாக இந்த நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. கழிவுநீர் தேங்கி நிற்பதுடன், நகரம் விரிவடைந்து வருவதால் ஏற்படும் கழிவுநீர் அதிகரிப்புடன், மழைநீர் உள்பட சேர்வதாலும் கடு மையான சுகாதார சீர்கேடு நிலவுகிறது. இப்பகுதி மக்கள் பெரும்பா லும் ஏழை, கைத்தறி நெசவாளர்களாக உள் ளனர். கழிவுநீர் பிரச்சனை காரணமாக, இப்பகுதி மக்களுக்கு அடிக்கடி காய்ச்சல், இருமல் உள்ளிட்ட பல்வேறு நோய் தொற்று ஏற்படுகிறது. எனவே கழிவுநீர் வெளியேறிச் செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சாக்கடை வடிகால் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கோரிக்கை மனுவில் வலியுறுத்தப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சியின் போக்குவரத்துக் கிளை உறுப்பினர் நாச்சிமுத்தி, அப்பகுதி மக்கள் உள்ளிட்டோர் உடன் சென்றனர். இந்த மனுவை பெற்றுக் கொண்ட ஆணை யர் வெங்கடேஸ்வரன், இதுகுறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உறுதியளித்ததாகவும் மார்க்சிஸ்ட் கட்சியி னர் தெரிவித்தனர்.