districts

img

வனவிலங்குகளால் பயிர்கள் சேதம் இழப்பீடு வழங்க வலியுறுத்தி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, ஜன.25- வன விலங்குகளால் சேதமடைந்த விவ சாய பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங் கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் கடம்பூரில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஈரோடு மாவட்டம், கடம்பூர் பகுதியில் காட்டு விலங்குகளால் ஏராளமான விவசாய பயிர்கள் சேதடைந்துள்ளது. இதனால் பாதிக் கப்பட்டவர்கள் இழப்பீடு விண்ணப்பித் துள்ளனர். இவ்வாறு விண்ணப்பித்த அனை வருக்கும் உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் வன விலங்குகள் விளை நிலங்களுக்கும், ஊருக்குள்ளும் வருவதை தடுக்க அகழிகள் மற்றும் மின்வேலி அமைத்து பாதுகாக்க அளிக்க வேண்டும். வனப்பகுதி சாலையோரங்கள் உள்ள முட் கள் மற்றும் மரங்களை வெட்டி ஆக்கிர மிப்புகளை அகற்றி, மனித - விலங்கு   மோதல் களை தடுக்க வேண்டும். மலைவாழ் மக்கள் தங்களுக்குத் தேவையான வன பொருட் களை எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண் டும். அத்துடன் கால்நடைகள் மேய்ப்பதை தடை செய்யக்கூடாது என வலியுறுத்தி கடம் பூர் பேருந்து நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மலை வட்டார செயலாளர் சி.துரைசாமி தலைமை வகித் தார். கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி. சண்முகம், மாவட்ட செயலாளர் ஆர்.ரகு ராமன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கட்சி நிர்வாகிகளும், திரளான மலைவாழ் மக்க ளும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.