districts

img

நூல் விலை உயர்வை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், ஜூன் 6- நாமக்கல் மாவட்டம் புதுச்சத்தி ரம் ஒன்றியம் ஏலூர் மாரியம்மன் கோவில் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் நூல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.  ஒன்றிய மோடி அரசின் தவ றான  பொருளாதார கொள்கையின் விளைவாக விசைத்தறி பட்டறை களை மூடிவிட்டு தொழிலாளர் களையும், தொழிலையும் பாது காக்க முடியாமல் ஜவுளி உற்பத்தி யாளர்கள் உள்ளிட்டோர் பெரும் துயரத்தை சந்தித்து வருகின்ற னர். இத்தகைய சூழலில் தொழிலை யும், தொழில்களையும் பாது காத்திட ஒன்றிய அரசாங்கம் பருத்தி மற்றும் நூல்களை அத்தியவசிய பட்டியலில் சேர்க்க வேண்டும். ஏற்றுமதியை தடுத்து நிறுத்த வேண்டும். பருத்தி பதுக்கலை தடுத்து நிறுத்திட வேண்டும். வேலையிலந்த தொழிலாளர்களின்  குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். தமிழக அரசு தமிழ்நாடு பருத்தி கழகம் எனும்  நிறுவனத்தை ஏற்படுத்தி, மாவட்ட தோறும் நூல் வங்கிகளை அமைத்து மானிய விலையில் விசைத்தறிகளுக்கு நூல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ராசி புரம் புதுச்சத்திரம் பிரதேச குழுவின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சி யின் ஏளூர் வார்டு உறுப்பினர் ஜோதி மணி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி,மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு.சுரேஷ், ராசிபுரம் தெற்கு பிரதேச செயலா ளர் எஸ்.பெரியசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். பிரதேச குழு உறுப்பினர்கள் ஆர்.நாகேஷ், கட்சியின் முன்னாள் ஒன் றிய செயலாளர் பழனிசாமி மற்றும் விவேகானந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.