ஈரோடு, அக்.22- ஒன்றிய மோடி அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் கொடூர தாக்குதலைக் கண்டித்தும், ரத்த வெறிபிடித்த இஸ்ரேல் போரை நிறுத்த வேண்டும். அணிசேரா கொள்கையைக் கைவிட்டு, இஸ்ரேலின் போர் வெறிக்கு ஆதரவளிக்கும் மோடி அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியின் சார் பில் ஈரோடு சூரம்பட்டி நால் ரோடு பகுதியில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிறுபான்மை மக்கள் நலக் குழு மாவட்டச் செயலாளர் ப.மாரிமுத்து தலைமை வகித்தார். சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் கண்டன உரை யாற்றினார். இதில், கட்சியின் மாவட்டச் செய லாளர் ஆர்.ரகுராமன், மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள், மாவட்டக்குழு உறுப் பினர்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.