districts

img

உணவுப்பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி அவிநாசியில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

அவிநாசி, ஜூலை 31 – அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரிவிதிப்பை உடனடியாக ஒன்றிய மோடி அரசு திரும்பப்பெற வலியுறுத்தி அவிநாசியில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  அனைத்து அத்தியாவசிய பொருட் கள் விலை கடுமையாக உயர்ந்துள் ளது. அதேபோல சமையல் எரிவாயு விலை 1100ஐ தாண்டியுள்ளது. வாங்கும் சக்தி இழந்து மக்கள் பெரும் அவதிக் குள்ளாகியுள்ள நிலையில் ஒன்றிய மோடி அரசு அரிசி, கோதுமை, பருப்பு, மாவு, வெள்ளம், உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு 5 சதவிகிதம் ஜிஎஸ்டி  வரியை விதித்துள்ளனர். கார்ப்பரேட் டுகளுக்கு வரிச்சலுகையும், எளிய உழைக்கும் மக்களுக்கு வரி விதிப்பு செய்து சுரண்டலில் ஈடுபடுகிற பாஜக ஒன்றிய அரசை கண்டித்து நாடு முழு வதும் மார்க்சிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக திருப்பூர் மாவட்டம் அவி நாசியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.  அவிநாசி ஒன்றிய குழு சார்பில் தபால் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர்கள் வெங்கடா சலம், பழனிச்சாமி, ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, ஒன்றிய குழு உறுப்பி னர்கள் சண்முகம், வேலுச்சாமி, ராஜன், திருமுருகன்பூண்டி நகர மன்ற கவுன் சிலர்கள் சுப்பிரமணியம், தேவராஜன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.