districts

img

சிபிஎம் போராட்டம் வெற்றி: புளியம்பட்டிக்கு அரசு பேருந்து இயக்கம்

திருப்பூர், நவ.10- மார்க்சிஸ்ட் கட்சியின் போராட்டத்தைத் தொடர்ந்து பல்ல டம், புளியம்பட்டி கிராமத்திற்கு அரசு பேருந்து சேவை துவங் கியது. பல்லடம் வட்டம், புளியம்பட்டி கிராமத்திலிருந்து கரடி வாவி அரசு பள்ளிக்கு சுமார் 60க்கும் மேற்பட்ட குழந்தை கள் தினந்தோறும் சென்று வருகின்றனர். இப்பகுதியில் சாதா ரண கூலி வேலைக்கு செல்லக்கூடிய பெற்றோர்கள் குழந்தை களை பள்ளிக்கு அனுப்புவதற்கு மாதம் தோறும் ஆட்டோ, வேன் வாடகையாக ருபாய் ஆயிரம் முதல் 1500 வரை செல விடக் கூடிய சூழ்நிலை உள்ளது. இதனால் மிகவும் சிரமப்படக் கூடிய சூழ்நிலையில் இருந்து வந்தனர். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புளியம்பட்டி  கிளையின் சார்பாக பள்ளி நேரத்துக்கு, புளியம்பட்டியில் இருந்து கரடிவாவிக்கு பள்ளி நேரத்தில் அரசு பஸ் இயக்க  வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த ஐந்து  மாத காலமாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வந் தது. கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன்,  அரசு போக்குவரத்து கழக கோவை மண்டல மேலாளரிடம் நேரில் பேசி வலியுறுத்தி வந்தார். இந்நிலையில் கடந்த  வாரம் சனிக்கிழமையன்று மறியல் போராட்டம் நடத்துவது என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் காமநாயக்கன் பாளையம் காவல்துறை, அரசு போக்குவரத்து கழக நிர்வாகி களோடு நடைபெற்று பேச்சுவார்த்தையில் 10 தினங்களுக்குள் பேருந்து இயக்குகிறோம் என உறுதியளித்ததின் பேரில் மறியல் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் வியாழனன்று காலை 8.45 மணி அளவில் சூலூர் பணிமனை யிலிருந்து இயக்கப்படுகிற 105 சி பேருந்து கிருஷ்ணாபுரம், புளியம்பட்டி வழியாக கரடிவாவிக்கு இயக்கப்பட்டது. இந்த துவக்க நிகழ்ச்சியில் பல்லடம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் தேன்மொழி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயலாளர் செ. முத்துக்கண்ணன், திராவிட முன் னேற்றக் கழகத்தின் பல்லடம் மேற்கு ஒன்றிய செயலாளர்  சு.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கொடியசைத்து பேருந்தை  துவக்கி வைத்தனர். பள்ளிக்குழந்தைகளை பெற்றோர்கள் மிக்க மகிழ்ச்சியோடு பேருந்தில் அனுப்பி வைத்தனர். பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு சால்வை அணி வித்து கௌரவிக்கப்பட்டது. கூடியிருந்த பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு பேருந்து இயக் கம் துவங்கியது.  இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்ல டம் ஒன்றிய செயலாளர் ஆர்.பரமசிவம், கட்சி ஒன்றியகுழு உறுப்பினர் கே.வி.சுப்பிரமணியன், வாலிபர் சங்கத்தின் ஒன் றிய செயலாளர் சி.முருகேஷ், மாதர் சங்க ஒன்றிய அமைப்பா ளர் ஜே.சித்ரா, புளியம்பட்டி கட்சி கிளை செயலாளர் மணி  மற்றும் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.