சேலம், டிச.20- அம்மாபேட்டை பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காந்தி நகர் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். சேலம் மாநகராட்சி, அம்மாபேட்டை, காந்தி நகர் பகுதியில் பழுதடைந்த மேல்நிலை குடிநீர் தொட்டியை இடித்து அகற்றிவிட்டு, புதிய குடிநீர் தொட்டி அமைத்து தர வேண்டும். குடிநீர் குழாய்களை புதிதாக மாற்றி தர வேண்டும். கழிவுநீர் கால்வாய் மற்றும் சாலை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். ஆண்களுக்கான பொது கழிப்பிட வசதி அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காந்தி நகர் பகுதியில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிபிஎம் தாதம்பட்டி கிளை நிர்வாகி தமிழ்ச்செல்வன் தலை மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சேலம் கிழக்கு மாநகரக்குழு உறுப்பினர்கள் ஜி.சுல்தான், பச்சமுத்து ஆகி யோர் கண்டன உரையாற்றினர். இதனைத்தொடர்ந்து மாநக ராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி, பிரச்சனைகள் மீது உரிய தீர்வு காணப் படும் என உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.